×

தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி – முதியவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே வாய்த் தகராறில், பக்கத்து வீட்டுக்காரர் கைவிரலை கடித்து துப்பிய சம்பவத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு. கள்ளக்குறிச்சி அடுத்த சிறுநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கிருபாகரன். இவரது தந்தை கலியதுரை. இவர் நேற்று முன்தினம் இயற்கை உபாதைக்காக அதேஊரை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவரது வீட்டை கடந்து சென்றுள்ளார். அப்போது, ஆறுமுகம், கலியதுரையை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஆறுமுகம், கலியதுரையின் வலது கையின் நடுவிரலை கடித்து துப்பியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த
 

கள்ளக்குறிச்சி அருகே வாய்த் தகராறில், பக்கத்து வீட்டுக்காரர் கைவிரலை கடித்து துப்பிய சம்பவத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கிருபாகரன். இவரது தந்தை கலியதுரை. இவர் நேற்று முன்தினம் இயற்கை உபாதைக்காக அதேஊரை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவரது வீட்டை கடந்து சென்றுள்ளார். அப்போது, ஆறுமுகம், கலியதுரையை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஆறுமுகம், கலியதுரையின் வலது கையின் நடுவிரலை கடித்து துப்பியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கலியதுரையை மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கலியதுரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மகன் கிருபாகரன் அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.