×

"ரெண்டு பெண்களை பழ தோட்டத்துக்கு கொண்டு போய்  .. "போலீஸ் வேடத்தில்  நடந்த பயங்கரம் 

 


போலீஸ் வேடத்தில் வந்த ஒரு நபர் இரண்டு பெண்களை மிரட்டி பலத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது .


ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ராவாடா கிராமத்தில் இரண்டு டீனேஜ் பெண்கள் அங்குள்ள ஹாஸ்டெலில் தங்கி படித்து வருகின்றனர் .இந்நிலையில் அந்த இரண்டு மாணவிகளும் சில தினங்களுக்கு முன்பு தங்களின் ஆண் நண்பர்களுடன் அங்குள்ள ஆற்றங்கரைக்கு வந்தனர் .அப்போது அங்கு  
35வயதான ராம்பாபு என்ற நபர் போலீஸ் உடையில் அங்கு வந்தார் .அவர் அங்கிருந்த அந்த டீனேஜ் பெண்களை அவரின் ஆண் நண்பர்களுடன் இருப்பதை படம் பிடித்தார் .பின்பு அந்த படங்களை அவர்களிடம் காண்பித்து ,அதை சமூக ஊடகத்தில் வெளியிட்டு  மற்றும் அவரின் பெற்றோர்களிடமும் ,ஆசிரியர்களிடமும் காண்பிப்பதாக மிரட்டினார் .அதனால் பயந்து போன அந்த பெண்களை, விசாரிக்க வேண்டும் என்று கூறி தன்னுடன் வர சொன்னார் .
அதன் பிறகு அவரை உண்மையான போலீஸ் என்று நம்பிய அந்த பெண்கள் அவருடன் சென்றனர் .பின்னர் அந்த நபர் அந்த மாணவிகளை அங்குள்ள ஒரு பழத்தோட்டத்தில் வைத்து பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டார் .பின்னர் அந்த பெண்கள் மீண்டும் அவர்கள் தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்கு வந்து தங்களுக்கு நடந்த கொடுமையை பற்றி அங்கிருந்தவர்களிடம் கூறினார் .பின்னர் அங்குள்ள காவல் நிலையாம்  சென்று புகார் கூறியதும் ,போலீசார் அந்த குற்றவாளி ராம்பாபுவை கைது செய்தனர்