×

“மனைவிக்கு கண்ட இடத்தில பூட்டு போட்ட கணவர்” -போலீசின் அதிரடியால் மீட்கப்பட்டார்

மனைவி மீது சந்தேகம் கொண்ட ஒரு கணவர் அவரை வீட்டில் பூட்டி வைத்ததால் கைது செய்யப்பட்டார் . டெல்லியின் ஷாலிமார் பாக் நகரில் ஷியாம் சிங் என்பவர் உத்தரபிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.அவர் அங்குள்ள ஆன்லைன் ட்ரேடிங் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றுகிறார் .அவருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது,ஒரு மகள் இருக்கிறார் .இந்நிலையில் அவர்கள் தங்களின் மாமியாரோடு வசித்து வருகிறார் .இதற்கிடையே அவருக்கு அவரின் மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்துள்ளது ,அதனால் அவர் அலுவலக விஷயமாக வெளியே
 

மனைவி மீது சந்தேகம் கொண்ட ஒரு கணவர் அவரை வீட்டில் பூட்டி வைத்ததால் கைது செய்யப்பட்டார் .


டெல்லியின் ஷாலிமார் பாக் நகரில் ஷியாம் சிங் என்பவர் உத்தரபிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.அவர் அங்குள்ள ஆன்லைன் ட்ரேடிங் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றுகிறார் .அவருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது,ஒரு மகள் இருக்கிறார் .இந்நிலையில் அவர்கள் தங்களின் மாமியாரோடு வசித்து வருகிறார் .
இதற்கிடையே அவருக்கு அவரின் மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்துள்ளது ,அதனால் அவர் அலுவலக விஷயமாக வெளியே செல்லும்போதெல்லாம் அவரின் மனைவியை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டுத்தான் போவார் .அதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது .அதனால் அவரின் மாமியார் அவரின் நடவடிக்கையை கண்டித்துள்ளார் .இந்நிலையில் நாளுக்கு நாள் அவரின் சந்தேக புத்தி அதிகமானதால் அவரை எங்கு சென்றாலும் அடித்து, கண்ட இடத்திலெல்லாம் பூட்டு போட்டு அடைத்து வைக்க ஆரம்பித்தார்.மேலும் அவரை வார்த்தைகளாலும் ஆபாசமாக திட்ட ஆரம்பித்துள்ளார் .இதன் காரணமாக அவர்கள் வாழ்வில் நிம்மதியில்லாமல் போனது .
இந்நிலையில் அவரின் மாமியார் இறந்து விட்டார் .அதன் பிறகும் அந்த கணவரின் கொடுமைகள் அதிகமானது .மேலும் அவரின் சந்தேக கொடுமைகளும் அதிகமானது .

அதை பொறுக்க முடியாத அந்த பெண் தன்னுடைய மகளோடு சேர்ந்து கொண்டு அங்குள்ள காவல் நிலையத்தில் போனில் அவர் மீது புகார் கொடுத்தார் .தகவல் கிடைத்ததும், தில்லி காவல்துறை குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் சோதனை நடத்தியதுடன், வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கவனித்தனர் . பின்னர் போலீசார் வீட்டின் பூட்டைத் திறந்து அந்தப் பெண்ணையும் அவரது மகளையும் மீட்டனர்.பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரின் கணவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள் .