×

முன்னாள் ராணுவ வீரர் கொலை : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

நாமக்கல் அருகே முன்னாள் ராணுவ வீரரை அவரது மனைவியே அடியாட்களை வைத்து கொலை செய்துவிட்டு நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ராசிபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் சிவகுமார். ராணுவ வீரரான இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்று தனது மனைவி பார்கவி மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வந்தார். கடந்த 6ஆம் தேதி சிவகுமார் ஊனாங்கல்பட்டி அருகே சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
 

நாமக்கல் அருகே முன்னாள் ராணுவ வீரரை அவரது மனைவியே அடியாட்களை வைத்து கொலை செய்துவிட்டு நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ராசிபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் சிவகுமார். ராணுவ வீரரான இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்று தனது மனைவி பார்கவி மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வந்தார். கடந்த 6ஆம் தேதி சிவகுமார் ஊனாங்கல்பட்டி அருகே சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

சிவகுமாரின் செல்போன் தரவுகளை வைத்து அவரது வீட்டின் மாடியில் குடியிருந்த செல்வராஜ், சிவகுமாரின் மனைவி பார்கவி, மாமியார் அம்சவள்ளி உள்ளிட்டோரை விசாரணைக்கு உட்படுத்தினர். அப்போது, செல்வராஜுக்கும் பார்கவிக்கும் இடையே தகாத உறவு இருந்ததும் சிவகுமாருக்கு இது தெரியவந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்ததும் அம்சவள்ளயுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி பார்கவி சிவகுமாரை கொலை செய்ததும் அம்பலமானது. இதற்கு செல்வராஜ் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுமட்டுமில்லாமல், சிவகுமாரை கொலை செய்வதற்காக பார்கவி கூலிப்படையை ஏவிவிட்டு கடந்த 5ம் தேதி ஊனாங்கல்பட்டி வழியாக அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தை மறித்து இரும்பு ராடால் தாக்கி சரமாரியாக குத்திக் கொலை செய்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, பார்கவி, அம்சவள்ளி, செல்வராஜ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாமக்கல், சேலம் சிறைகளில் அடைத்துள்ளனர்.