×

“புடிங்கடா பணத்தை ,கொண்டு வாங்கடா அவன் பிணத்தை”-மருமகன் கொலையை பார்த்து ரசித்த மாமியார்

சொத்து தகராறில் சொந்த மருமகனை கூலிப்படை மூலம் தீர்த்து கட்டிய மாமியாரை போலீசார் பிடித்துள்ளார்கள். உ.பி.யின் ஆக்ராவில் கபில் பவார் என்ற 45 வயது வழக்கறிஞர் இருந்தார் .அவருக்கும் அவரின் 65 வயதான மாமியார் சிம்லா பவாருக்கும் கடந்த ஒரு வருடமாகவே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது .இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர் .இந்நிலையில் அவரின் மாமியார் தன்னுடைய மருமகனை இந்த சொத்து விஷயமாக கொலை செய்ய முடிவு செய்தார் .அதனால் அந்த பகுதியிலிருக்கும்
 

சொத்து தகராறில் சொந்த மருமகனை கூலிப்படை மூலம் தீர்த்து கட்டிய மாமியாரை போலீசார் பிடித்துள்ளார்கள்.


உ.பி.யின் ஆக்ராவில் கபில் பவார் என்ற 45 வயது வழக்கறிஞர் இருந்தார் .அவருக்கும் அவரின் 65 வயதான மாமியார் சிம்லா பவாருக்கும் கடந்த ஒரு வருடமாகவே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது .இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர் .
இந்நிலையில் அவரின் மாமியார் தன்னுடைய மருமகனை இந்த சொத்து விஷயமாக கொலை செய்ய முடிவு செய்தார் .அதனால் அந்த பகுதியிலிருக்கும் ஹர்ஷ் என்பவரிடம் 10 லட்ச ரூபாய் பணம் தருகிறேன் தன்னோட மருமகனை கொன்று விடுமாறு கூறியுள்ளார் .அதை கேட்டு சந்தோஷமான ஹர்ஷ் அவரைகொலை செய்ய ஒப்புக்கொண்டார் .
அதனால் கடந்த வாரம் கபிலை அவர் ஒரு இடத்திற்கு மது அருந்த கூப்பிட்டு சென்றுள்ளார் .அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட சைடிஷ் முட்டை பொரியலில் விஷத்தை கலந்துள்ளார்கள் .அதை சாப்பிட்டதும் மயக்கமடைந்த கபிலை கழுத்தை நெரித்து கொலை செய்தார்கள் .இந்த கொலை சம்பவத்தின் வீடியோவை அவரின் மாமியாருக்கு நேரடியாக காமித்தார்கள் .அதை பார்த்து அவரின் மாமியார் மனம் குளிர்ந்து அந்த கூலி படை தலைவன் ஹர்ஷுக்கு 10 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்தார் .இந்த கொலைக்கு பிறகு கபிலை காணாமல் தவித்த அவரின் குடும்பத்தார் போலிஸில் புகார் கூறினார் .போலீசார் விசாரணை செய்ததில் அவரின் மாமியார் அவரை கொன்ற விவகாரம் தெரிந்து அவரை போலீசார் கைது செய்தார்கள் .