×

`இப்படியெல்லாம் பிறந்தநாளை கொண்டாடுவாங்களா?’- சர்ச்சைக்குள்ளான வீடியோ

வாலிபர் ஒருவரின் பிறந்த நாளை நண்பர்கள் புதுவிதமாக கொண்டாடியதோடு, அதனை செல்போனில் வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகம் டிஜிட்டலுக்கு மாறி வரும் நிலையில் வாலிபர்கள் தங்கள் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடுகிறோம் என்று கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதோடு, காவல்துறையினரின் நடவடிக்கையில் இருந்தும் தப்ப முடியவில்லை. குமரி மாவட்டம், திட்டுவிளையில் வாலிபரின் பிறந்த நாளை நண்பர்கள் புதுவிதமாக கொண்டாடி இருக்கிறார்கள். அந்த கொண்டாட்டத்தை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த
 

வாலிபர் ஒருவரின் பிறந்த நாளை நண்பர்கள் புதுவிதமாக கொண்டாடியதோடு, அதனை செல்போனில் வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலகம் டிஜிட்டலுக்கு மாறி வரும் நிலையில் வாலிபர்கள் தங்கள் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடுகிறோம் என்று கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதோடு, காவல்துறையினரின் நடவடிக்கையில் இருந்தும் தப்ப முடியவில்லை.

குமரி மாவட்டம், திட்டுவிளையில் வாலிபரின் பிறந்த நாளை நண்பர்கள் புதுவிதமாக கொண்டாடி இருக்கிறார்கள். அந்த கொண்டாட்டத்தை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த காட்சி வைரலாக பரவி வருகிறது. முதலில் பிறந்த நாள் கொண்டாடும் நண்பரை கேக் வெட்ட வைத்து பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறார்கள். பின்னர் கேக்கை வாலிபர், நண்பர்களுக்கு ஊட்டி விடுகிறார். நண்பர்களும் அவருக்கு ஊட்டி விடுகிறார்கள். அதன்பிறகு, வாலிபரை மரத்தில் கட்டி வைத்து, அவர் மீது வண்ணப்பொடிகளை நண்பர்கள் தூவுகின்றனர். பின்னர் தலை மற்றும் உடலில் பல இடங்களில் முட்டையை உடைத்து அபிஷேகம் செய்கிறார்கள். நண்பர்கள் செய்யும் அந்த அன்பு தொல்லையை பிறந்த நாள் கொண்டாடும் வாலிபர் எந்த தடையும் செய்யாமல் புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறார். இந்த காட்சி 5 நிமிடங்கள் ஓடுகிறது.

ஏற்கெனவே குமரி மாவட்டத்தில் சாணியை கரைத்து பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர் மீது அவருடைய நண்பர்கள் பூசும் சம்பவம் சமீபத்தில் நடந்திருந்தது. இந்த நிலையில், நண்பர்கள் முட்டை அபிஷேகம் செய்யும் காட்சி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

“பிறந்த நாளன்று பெரியவர்களிடம் ஆசி பெறுவது, கடவுளை வணங்குவது, ஏழைகளுக்கு உதவுவது போன்ற கலாசாரம் இளைஞர்களிடையே மாறி, தற்போது உற்சாகமிகுதியில் வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடும் நோக்கில் முட்டை அபிஷேகம் செய்யும் காட்சி முகம் சுளிக்கும் வகையில் உள்ளது” என சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகிறார்கள்.