×

"க்ளினிக்கிலே கேமரா வச்சி ,கண்டபடி இருக்க வச்சி ..".-சிகிச்சைக்கு வந்த பெண்ணை சிக்க வைத்த மருத்துவர் .

 

தன்னுடன் உல்லாசமாக  இருந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று இளம்பெண்ணை மிரட்டிய மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தின் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த  சித்த மருத்துவர் 31 வயதான  செல்வபிரசாத் ,   அதே பகுதியில் சொந்தமாக கிளினிக் வைத்துள்ளார்.
 இவரது கிளினிக்குக்கு கடந்த 2019ம் ஆண்டு  சங்கர் என்பவரின் மனைவி ராதிகா என்பவர் சிகிச்சைக்காக வந்தார். அவர் மிகவும் வசதியான வீட்டு பெண் என்பதை தெரிந்து கொண்ட அந்த மருத்துவர் அந்த பெண்ணுக்கு ஆசை வலை விரித்து ,தன் வலையில் விழ வைத்தார் .பின்னர் அந்த கிளினிக்கில் கேமரா வைத்து ,அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதை பதிவு செய்தார் .
அதன் பிறகு  அந்த உல்லாச வீடியோவை அந்த பெண்ணிடம் காமித்து அதை சமூக ஊடகத்தில் வெளியிடாமலிருக்க .அடிக்கடி பணம் கேட்டார் .அதனால் பயந்து போன அந்த பெண் அவர் கேட்கும்போதெல்லாம் நகை பணம் ஆகியவற்றை கொண்டு வந்து கொடுத்தார் .இந்நிலையில் அந்த மருத்துவருக்கு வேறொரு பெண்ணுடன் கல்யாணம் நிச்சயமானதால் அவர் அந்த ராதிகாவிடம் நிறைய பணம் கேட்டார் .இதனால் அந்த பெண் கோவப்பட்டு அந்த மருத்துவர் மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து  அந்த மருத்துவரை கைது செய்தனர்