×

தேமுதிக பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை: நள்ளிரவில் பயங்கரம்!

சென்னை அருகே நள்ளிரவில் தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரை சேர்ந்த ராஜ்குமார் (36), தேமுதிகவின் நகர துணை செயலாளர் பதவி வகித்தார். அனகாபுத்தூரில் அவர் டெய்லர் கடை ஒன்றையும் நடத்தி வந்தார். வழக்கம் போல நேற்று இரவு கடையில் இருந்து ராஜ்குமார் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அவரை ஒரு கும்பல் பின்தொடர்ந்து சென்றுள்ளது. பேருந்து நிலையம் அருகே அவரை வழிமறித்த மர்ம கும்பல்,
 

சென்னை அருகே நள்ளிரவில் தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரை சேர்ந்த ராஜ்குமார் (36), தேமுதிகவின் நகர துணை செயலாளர் பதவி வகித்தார். அனகாபுத்தூரில் அவர் டெய்லர் கடை ஒன்றையும் நடத்தி வந்தார். வழக்கம் போல நேற்று இரவு கடையில் இருந்து ராஜ்குமார் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அவரை ஒரு கும்பல் பின்தொடர்ந்து சென்றுள்ளது. பேருந்து நிலையம் அருகே அவரை வழிமறித்த மர்ம கும்பல், தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த ராஜ்குமாரை மீட்ட பொதுமக்கள், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேமுதிக பிரமுகர் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கட்சி பிரச்னையா? என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.