×

நண்பர்களுக்குள் தகராறு – பீர் பாட்டிலால் இளைஞர் அடித்து கொலை!

நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், பீர் பாட்டிலால் இளைஞர் அடித்து கொலை செயப்பட்ட சம்பவம் ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அடுத்த தமிழக மாநில எல்லை பகுதியான, அத்திப்பள்ளியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ஸ்ரீகாந்த்(25). இவர் நேற்று ஆனேக்கல் அடுத்த அரளி என்கிற இடத்தில் தனது 4 நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 4 பேரும் சேர்ந்து ஸ்ரீகாந்தை பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம்
 

நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், பீர் பாட்டிலால் இளைஞர் அடித்து கொலை செயப்பட்ட சம்பவம் ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் அடுத்த தமிழக மாநில எல்லை பகுதியான, அத்திப்பள்ளியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ஸ்ரீகாந்த்(25). இவர் நேற்று ஆனேக்கல் அடுத்த அரளி என்கிற இடத்தில் தனது 4 நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

rep image

அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 4 பேரும் சேர்ந்து ஸ்ரீகாந்தை பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சடலத்தை மீண்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொல்லப்பட்ட ஸ்ரீகாந்த் மீது, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் அத்திப்பள்ளி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது . அவர் எதற்க்காக கொலை செய்யப்பட்டார் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவாக உள்ள நண்பர்களுக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.