×

“சிறையின் நன்னடத்தை லட்சணத்தை பார்த்திங்களா சாமி”- டெல்லி 12 வயது சிறுமி பாலியல் வழக்கு குற்றவாளி, நன்னடத்தை விதியில் வெளியே வந்தவராம் .

டெல்லியில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டெல்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கிஷன்குமார் என்ற 33 வயது நபர் ஏற்கனவே 2006ம் ஆண்டு டெல்லியின் சுல்தான்புரியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் .பிறகு அவரை சிறையில் நன்னடத்தை விதியின் கீழ் வெளியே அனுப்பியுள்ளனர் . பிறகு வெளியே வந்த அவரை, அவரின் வீட்டினர் சேர்க்காததால் அவர் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்
 

டெல்லியில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டெல்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கிஷன்குமார் என்ற 33 வயது நபர் ஏற்கனவே 2006ம் ஆண்டு டெல்லியின் சுல்தான்புரியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் .பிறகு அவரை சிறையில் நன்னடத்தை விதியின் கீழ் வெளியே அனுப்பியுள்ளனர் .


பிறகு வெளியே வந்த அவரை, அவரின் வீட்டினர் சேர்க்காததால் அவர் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார் .அதற்கு பிறகும் ஒரு திருட்டு வழக்கில் உள்ளே போனார் .பிறகு அந்த வழக்கிலிருந்தும் வெளியே வந்த அவர் இப்போது டெல்லியில் 12 வயது சிறுமியின் வீட்டிற்குள் புகுந்தார் .அப்போது தனியே இருந்த சிறுமியை பார்த்த அவருக்கு அவரை கெடுக்கும் ஆசை தோன்றியுள்ளது .அதனால் அவரின் வீட்டிற்குள் சென்று விரட்டியுள்ளார் .ஆனால் அந்த சிறுமி எவ்வளவோ போராடியுள்ளார் ,இறுதியில் அந்த நபர் அந்த சிறுமியை தையல் மெஷினால் தாக்கியதில் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை .அந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு, வீட்டிலிருந்த 200 ரூபாயுடன் க்ருஷணகுமார் ஓடியுள்ளார் .பிறகு அக்கம் பக்கத்தினர் அந்த சிறுமியை ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்துள்ளனர் ,இப்போது சிறுமியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது .