×

“லட்சணமா இருக்கிறே லட்சத்துல சம்பாதிக்கலாம்”-பேங்க் வேலைன்னு பலான வேலை கொடுத்த நபர்

ஆன்லைனில் பேங்க் வேலை தருவதாக விளம்பரம் செய்து இளம் பெண்களை வரவைத்து, அவர்களை மசாஜ் செய்ய வைத்து பல பெண்களை ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர் டெல்லியில் ரோஹிணி பகுதியில் வசிக்கும் பன்சால் என்ற நபர் அடிக்கடி ஆன் லைனில் பேங்க் வேலைக்கு பெண்கள் தேவைன்னு விளம்பரம் கொடுப்பார் .அதை பார்த்து விட்டு அவரை தேடி வரும் பெண்களிடம் அவர் தங்களின் தகுதிக்கு பேங்க் வேலை கிடைக்காது அதனால் அழகா இருக்கிற நீங்க மாடெலிங் செஞ்சா
 

ஆன்லைனில் பேங்க் வேலை தருவதாக விளம்பரம் செய்து இளம் பெண்களை வரவைத்து, அவர்களை மசாஜ் செய்ய வைத்து பல பெண்களை ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்

டெல்லியில் ரோஹிணி பகுதியில் வசிக்கும் பன்சால் என்ற நபர் அடிக்கடி ஆன் லைனில் பேங்க் வேலைக்கு பெண்கள் தேவைன்னு விளம்பரம் கொடுப்பார் .அதை பார்த்து விட்டு அவரை தேடி வரும் பெண்களிடம் அவர் தங்களின் தகுதிக்கு பேங்க் வேலை கிடைக்காது அதனால் அழகா இருக்கிற நீங்க மாடெலிங் செஞ்சா லட்சக்கணக்குல சம்பாதிக்கலாம்னு அவர்களுக்கு வலை வீசுவார் .
அவரின் வலையில் விழும் பெண்களை ஹோட்டலுக்கு வரவைத்து முதலில் மசாஜ் வேலையில் ஈடுபடுத்துவார் .பிறகு பலான வேளைகளில் ஈட்டுபடுத்தவார் .அதன் படி சமீபத்தில் ஒரு இளம் பெண் அவரின் விளம்பரத்தை பார்த்து அவர் சொன்ன படி வங்கியில் வேலை கிடைக்கும் என்று நம்பி அவரை தேடி வந்தார் .அந்த பெண்ணை பார்த்த பன்சால் அவரின் அழகில் மயங்கி ‘உங்களுக்கு பேங்கில் இப்போது வேலை இல்லை என்று சொல்லி விட்டார்கள் அதனால் நீங்கள் மாடலிங் செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் பிறகு வங்கியில் வேலை வாங்கி தருவதாக’ ஆசை காமித்தார் .
பிறகு ஒரு நாள் அந்த பெண்ணை அங்குள்ள ஹோட்டலுக்கு மாடெலிங் ஆடிஷன் நடப்பதாக கூறி வரச்சொன்னார் ,அவரின் பேச்சை நம்பி சென்ற அந்த பெண்ணை அவர் மசாஜ் செய்ய வைத்து அதை அவரின் அனுமதியின்றி வீடியோவும் எடுத்துள்ளர் .பிறகு அந்த பெண் அவரிடமிருந்து தப்பி வந்து அங்குள்ள காவல் நிலையத்தில் அவர் மீது புகாளித்தார் .போலீசார் பன்சாலியை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் இது போல பல பெண்களை ஏமாற்றிய விஷயம் தெரிந்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.