×

"அடிப்பாவி! பெரியப்பா பையனோடவா இப்படி செய்வே" -மகளின் உறவை கண்டித்த தாய்க்கு நேர்ந்த கதி  

 

கள்ளக்காதலை கண்டித்த பெற்ற தாயை, மகளே கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது.


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள துமகூரு கொரடகரேவின் சஜ்ஜன்ராவ் வீதியில் வசித்தவர் 45 வயதான சாவித்ரம்மா.இவரது மகள் 20 வயதான சைலஜா அந்த தாயுடன் வசித்து வந்தார் .இவரும், இவரின் பெரியப்பா மகன் புனித் என்ற  25 வயதான வாலிபரும்  கள்ளத்தொடர்பு வைத்திருந்தனர். இதையறிந்து அதிர்ச்சியடைந்த சாவித்ரம்மா, இருவரையும் கண்டித்து, இந்த முறையற்ற உறவினை விட்டு விடுமாறு புத்திமதி கூறினார்.அதனால் சில நாட்கள் விலகியிருப்பது போல் நடித்த அவர்கள்,  மீண்டும் பழையபடி நடந்து கொண்டனர். இதனால் அந்த தாய் இதையறிந்து அவரை மீண்டும் கண்டித்தார் .இதனால் தங்களின் கள்ளத்தொடர்புக்கு தடையாக இருந்த தன் தாயை கொலை செய்ய, மகள் சைலஜா திட்டமிட்டார்.

அவரின் திட்டப்படிகடந்த  ஜனவரி 30ம் தேதி , அவரின் தாயை தூங்கும்போது ,அவரின்  மகளும், கள்ள காதலன் புனித்தும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பிறகு இறந்த அவரின் உடலை வீட்டின் முன் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டு, அவர் தவறி விழுந்து இறந்ததாக ஊரார் முன் கதை கட்டினர்.இந்த மரணம் பற்றி விசாரணை நடத்திய போலீசாருக்கு, சைலஜா, புனித் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்தது. இருவரையும் தீவிரமாக விசாரித்ததில், அந்த தாயை மகளே புனித்துடன் சேர்ந்து கொலை செய்தது தெரிந்து,இருவரையும் போலீசார்  கைது செய்தனர் .