“மேல் சாதி பைக்கை தொட்ட கையை வெட்டு”- தலித் இளைஞர் மீது தாக்கு -தொடரும் தீண்டாமை ..
ஒரு தலித் வாலிபர் ,ஒரு குறிப்பிட்ட சாதியினரின் பைக் மீது அமர்ந்ததால் அந்த சாதியை சேர்ந்த 13 பேரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது .
கர்நாடக மாநிலம் விஜயபுராவில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் தங்களின் பைக்கை ஒரு இடத்தில நிறுத்தி வைத்திருந்தனர் ,அப்போது அங்கு வந்த ஒரு தலித் இனத்தை சேர்ந்த 32 வயது வாலிபர் அந்த பைக்கின் மீது அமர்ந்தார் .இதனால் அதை தூரத்திலிருந்த பார்த்த அந்த சாதியை சேர்ந்த 13 பேர் அந்த வாலிபரை பிடித்து “நீ ஒரு தலித் வாலிபன் நீ எப்படி எங்களின் பைக்கை தொடலாம்” என்று அவரை அங்கிருந்த கம்பு மற்றும் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர் என்று அந்த வாலிபர் போலீசில் புகாரில் கூறினார்