×

"முதலிரவுக்கு முன்னாடியே உடலுறவு கொண்ட கணவனை .."ஒரு மனைவி அளித்த வினோதமான புகார் 

 

கல்யாணத்துக்கு முன்னாடியே தன் கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தததாக கணவர் மீது புகாரளித்து விட்டு ,பின் அந்த புகாரை வாபஸ் பெற்ற பெண்ணுக்கு கோர்ட் அபராதம் விதித்தது 

 உத்திர பிரதேச மாநிலத்தில் சல்மான் என்ற கணவரோடு ஒரு மனைவி வாழ்ந்து வந்தார் .திடீரென  அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கோவப்பட்ட அந்த மனைவி ,தனது கணவர் தன்னை திருமணத்திற்கு முன்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்தார் . 
அதனால் போலீசார் அந்த கணவர் சல்மான் மீது வழக்கு பதிந்து கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது 
திடீரென இந்த வழக்கில் ஒரு  திருப்பம் ஏற்பட்டது .அதன் படி கணவர் மீது  புகார் அளித்த மனைவி திடீரென தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். திருமணத்திற்கு முன்பு சல்மானுக்கும் தனக்கும் இடையே எந்தவிதமான உடல் ரீதியான உறவும் இல்லை என்றும், தான் அவரை மட்டுமே காதலிப்பதாகவும் கூறினார். இதையடுத்து கணவன் மீது மனைவி சுமத்திய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று நீதிமன்றம் அறிவித்தது. மேலும் கணவர் மீதான எப்ஐஆரை ரத்து செய்து, மனைவிக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது