×

“உன் பொண்டாட்டி என் கூடத்தான் இருந்தாள்” -கணவனிடம் போட்டு கொடுத்த நண்பருக்கு நேர்ந்த கதி.

ஒரு வங்கி ஊழியரை கொலை செய்த வழக்கில் ஒரு தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளார்கள் மும்பையின் ராய்காட் மாவட்டத்தில் நெரலில் அமைந்துள்ள ஒரு பகுதியில் 31 வயதான சுஷில் குமார் சர்நாயக் என்பவர் வங்கி ஊழியராக பணியாற்றினார் .அதற்கு முன்பு அவர் ஒரு பிபிஓ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் .அப்போது அவரோடு சேலோனி என்ற பெண்ணும் பணியாற்றி வந்துள்ளார் .அப்போது இருவரும் நண்பர்களாக இருந்துள்ளார்கள் .அதன் பிறகு அந்த பெண் சலோனி , சார்லஸ் நாடார் என்பவரை
 

ஒரு வங்கி ஊழியரை கொலை செய்த வழக்கில் ஒரு தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளார்கள்

மும்பையின் ராய்காட் மாவட்டத்தில் நெரலில் அமைந்துள்ள ஒரு பகுதியில் 31 வயதான சுஷில் குமார் சர்நாயக் என்பவர் வங்கி ஊழியராக பணியாற்றினார் .அதற்கு முன்பு அவர் ஒரு பிபிஓ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் .அப்போது அவரோடு சேலோனி என்ற பெண்ணும் பணியாற்றி வந்துள்ளார் .அப்போது இருவரும் நண்பர்களாக இருந்துள்ளார்கள் .அதன் பிறகு அந்த பெண் சலோனி , சார்லஸ் நாடார் என்பவரை கல்யாணம் செய்து கொண்டு போய் விட்டார்

அதன்பிறகு ஒரு நாள் சர்னாய்க் சலோனியைச் சந்திக்கச் சென்றபோது, ​​அவர் கணவனைக் கோபப்படுத்தும் விதமாக  அவளைப் பற்றி சில கருத்துகளைத் தெரிவித்தார். இதனால் கோபமுற்ற அவரின் கணவர் சார்லஸ் நாடார் சர்நாயக்கின் கழுத்தை  கத்தியால் வெட்டினார்.அப்போது அவருக்கு அந்த பெண் சலோனி அவருக்கு உதவினார்.

பின்னர் இருவரும் சேர்ந்து சர்நாயக்கின் இறந்த உடலைக் ஒரு குப்பை தொட்டியில் கொட்ட திட்டமிட்டனர். அதன்  காரணமாக அடுத்த நாள், இந்த தம்பதியினர் இரண்டு சூட்கேஸ்களை வாங்கினர். அதில் சர்நாயக்கின் இறந்த உடலை பன்னிரண்டு துண்டுகளாக நறுக்கி அதில் அடைத்தனர் .பின்னர்  நறுக்கப்பட்ட உடல் பாகங்களை இரண்டு சூட்கேஸ்களில் வைத்து ஒரு குப்பை தொட்டியில்  கொட்டினார்கள் .

கடந்த திங்கள் கிழமை வீட்டை  விட்டு வெளியே சென்ற சார்நாயக் வீடு திரும்பாததால் அவரின் தாயார் போலீசில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்த போது அவரின் தோழியின் கணவரால் அவர் கொலை செய்யப்பட்ட விவரம் கண்டறிந்தார்கள் .அதன் பின்னர் அவரை கொலை செய்த வழக்கில் அந்த தம்பதிகள் கைது செய்யப்பட்டார்கள் .