×

வீட்டில் தனியாக இருந்த தம்பதி கழுத்தறுத்துக் கொலை; சென்னை அருகே நடந்த கொடூர சம்பவம்!

வண்டலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்துள்ள கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சாம்சங் தினகரன்(63). இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர் இரண்டாவது மனைவி ஜெனட்(58) என்பவருடன் கொளப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் முதல் மனைவியின் மகள் தந்தையுடன் பேசுவதற்காக செல்போனில் அழைப்பு விடுத்துள்ளார். அவர் செல்போனை எடுக்காததால் மீண்டும் காலை தொடர்பு
 

வண்டலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்துள்ள கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சாம்சங் தினகரன்(63). இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர் இரண்டாவது மனைவி ஜெனட்(58) என்பவருடன் கொளப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் முதல் மனைவியின் மகள் தந்தையுடன் பேசுவதற்காக செல்போனில் அழைப்பு விடுத்துள்ளார். அவர் செல்போனை எடுக்காததால் மீண்டும் காலை தொடர்பு கொண்டுள்ளார். இரு முறையும் சாம்சன் போனை எடுக்காததால் பதற்றமடைந்த மகள் தனது தாய் மற்றும் சகோதரனுடன் கொளத்தூருக்கு கிளம்பியுள்ளார்.

இதனிடையே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கொளத்தூருக்கு சென்ற சாம்சனின் பிள்ளைகள் அவரது வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர்களை காணவில்லை. பின்னர், ரத்தம் சிதறி தண்ணீர் ஊற்றி கழுவியது போன்ற தடையம் மட்டும் இருந்துள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்த பார்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தரை தளத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் ஜெனிட், சாம்சன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதையடுத்து அவர்களது சடலத்தை மீட்ட போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த தம்பதியை கொலை செய்தது யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.