×

“எங்களை வாழ விடு,இல்லேன்னா இறந்து விடு” -ஒரு காதலர்களால் பெற்றோருக்கு நேர்ந்த நிலை.

தங்களின் காதலை எதிர்த்த பெற்றோரை ஒரு காதலர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது . மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் ஏரோட்ரோம் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் ஜோதி பிரசாத் சர்மா (45) மற்றும் அவரது மனைவி நீலம் (43)ஆகியோர் தங்களின் டீனேஜ் மகளோடு வசித்து வந்தார்கள் .இதில் ஜோதிபிரசாத் சிறப்பு ஆயுதப்படை (எஸ்.ஏ.எஃப்)யில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார் .இந்நிலையில் அவரின் மகள் ஒருவரை காதலித்து வந்துள்ளார் .அதனால் அவரின் தந்தையான கான்ஸ்டபிளுக்கு இந்த காதல் விவகாரம்
 

தங்களின் காதலை எதிர்த்த பெற்றோரை ஒரு காதலர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது .


மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் ஏரோட்ரோம் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் ஜோதி பிரசாத் சர்மா (45) மற்றும் அவரது மனைவி நீலம் (43)ஆகியோர் தங்களின் டீனேஜ் மகளோடு வசித்து வந்தார்கள் .
இதில் ஜோதிபிரசாத் சிறப்பு ஆயுதப்படை (எஸ்.ஏ.எஃப்)யில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார் .
இந்நிலையில் அவரின் மகள் ஒருவரை காதலித்து வந்துள்ளார் .அதனால் அவரின் தந்தையான கான்ஸ்டபிளுக்கு இந்த காதல் விவகாரம் பிடிக்கவில்லை .அதனால் அவரின் காதலனை கூப்பிட்டு பலமுறை கண்டித்துள்ளார் .அப்போது அவரிடம் அவர் தன்னுடைய மகளை மறந்து விடுமாறும் .அவரை காதலிப்பதை நிறுத்தி விடுமாறும் ,மீறி அவரை காதலிப்பது தங்களுக்கு தெரிந்தால் அவரை சும்மா விடமாட்டேனென்று கூறியுள்ளார் .
அதனால் அவரின் காதலன் அந்த கான்ஸ்டபிள் மீது கடும் கோபத்தில் இருந்தார் .அப்போது அந்த கான்ஸ்டபிள் அவரின் மகளிடமும் இந்த காதலனை மறந்து விடுமாறு கூறியுள்ளார் .ஆனால் அவரின் மகளும் அந்த காதலனும் அவரின் பேச்சை மீறி காதலித்து வந்துள்ளார்கள் .இந்த விஷயம் தெரிந்து அந்த கான்ஸ்டபிள் மீண்டும் அவர்களை கூப்பிட்டு கண்டித்துள்ளார் .
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று அவர்களின் வீட்டிலிருந்து ஒரு அலறல் சத்தம் கேட்டுள்ளது .அப்போது அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது அந்த வீட்டிலிருந்த கான்ஸ்ட்டபிள் மற்றும் அவரின் மனைவி இருவரும் கூர்மையான் ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறந்து கிடந்தார்கள் .அப்போது அவரின் மகள் வெளியே நடமாடிக்கொண்டிருந்தார் .பிறகு இந்த கொலை விஷயம் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீசார் விரைந்து வந்து விசாரித்து வருகிறார்கள் .இப்போது நடந்த முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்களின் மகளும் அவரின் காதலனும் சேர்ந்து அவர்களை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களை போலீசார் விசாரித்து வருகிறார்கள் .