×

கல்லூரிக்கு போன மாணவி -காமத்தோடு காத்திருந்த வாலிபர்கள் -கடைசியில் நடந்த பரிதாபம்

ஒரு கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்று தோல்வியுற்றதால் அவரை மூன்று பேர் தீ வைத்து கொளுத்தியதால் அவர் இறந்தார் . உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள ஷாஜகான் பூரில் உள்ள சுவாமி சுக்தேவானந்த் கல்லூரியில் ஒரு 20 வயதான மாணவி படித்து வந்தார் .அவரை அவரின் தந்தை கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதியன்று அந்த கல்லூரியில் இறக்கி விட்டார் .அதன் பிறகு அந்த பெண் மாலையில் வீடு திரும்ப வந்த போது , சில மாணவர்கள்
 


ஒரு கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்று தோல்வியுற்றதால் அவரை மூன்று பேர் தீ வைத்து கொளுத்தியதால் அவர் இறந்தார் .


உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள ஷாஜகான் பூரில் உள்ள சுவாமி சுக்தேவானந்த் கல்லூரியில் ஒரு 20 வயதான மாணவி படித்து வந்தார் .அவரை அவரின் தந்தை கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதியன்று அந்த கல்லூரியில் இறக்கி விட்டார் .அதன் பிறகு அந்த பெண் மாலையில் வீடு திரும்ப வந்த போது , சில மாணவர்கள் அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்கள் .ஆனால் அந்த மாணவி அவர்களிடமிருந்து தப்பியோடியுள்ளார் .அதனால் கோவப்பட்ட அந்த மாண்வர்கள் அந்த பெண்ணின் உடலில் தீவைத்து கொளுத்தினார்கள் .
அதனால் கடுமையான தீக்காயமுற்ற அந்த பெண்ணை லக்னோ நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .ஆனால் அந்த மாணவி கடந்த ஒரு மாதமாக சிகிச்சை செயதும், பலனளிக்காமல் செவ்வாய்க்கிழமை இறந்தார் .அதன் பேரில் அந்த பெண்னின் தந்தை போலீசில் புகாரளித்தார் .அப்போது அவரளித்த புகாரில் ,தான் தன்னுடைய மகளை அந்த கல்லூரியிலிருந்து கூட்டி வர சென்ற போது அவர் கல்லூரி முடியும் நேரத்திற்கு முன்பே வெளியேறிவிட்டார் .மேலும் அவரை சில மாணவர்கள் பலாத்காரம் செய்ய துரத்தி,அந்த முயற்சி தோல்வியுற்றதால் அவரை தீவைத்து கொளுத்தினாரகள் .அப்போது அவர் தீ பிழம்புகளுடன் அருகிலுள்ள வயல் வெளியில் கிடந்தார் .அவரை மீட்டு ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார் என்றார் .போலீசார் இது பற்றி விசாரித்து வருகிறார்கள் .