×

“இரவெல்லாம் உறவுக்கு கூப்பிட்டு போன் பண்றானுங்களே” -மாணவனால் புலம்பும் டீச்சர்.

ஒரு மாணவரை திட்டிய கணக்கு டீச்சரை அந்த மாணவர் ஒரு விபச்சார பெண்ணாக சித்தரித்து ஊடகத்தில் வெளியிட்டதால் அவர் கைது செய்யப்பட்டார் . உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ஒரு ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் பள்ளி மாணவர் ,35 வயதான ஒரு ஆசிரியையிடம் கணக்கு ட்யூஷன் படித்து வருகிறார் .கடந்த சில மாதங்களாக அந்த ஆசிரியையிடம் ட்யூஷன் சென்று வந்த அந்த மாணவனுக்கு ஒழுங்காக கணக்கு வரவில்லை என்று அந்த டீச்சர் அவனை திட்டி,டியூஷனுக்கு வரவேண்டாமென்று கூறியுள்ளார்
 

ஒரு மாணவரை திட்டிய கணக்கு டீச்சரை அந்த மாணவர் ஒரு விபச்சார பெண்ணாக சித்தரித்து ஊடகத்தில் வெளியிட்டதால் அவர் கைது செய்யப்பட்டார் .

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ஒரு ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்  பள்ளி மாணவர் ,35 வயதான ஒரு ஆசிரியையிடம் கணக்கு ட்யூஷன் படித்து வருகிறார் .கடந்த சில மாதங்களாக அந்த ஆசிரியையிடம்  ட்யூஷன் சென்று வந்த அந்த மாணவனுக்கு ஒழுங்காக கணக்கு வரவில்லை என்று அந்த டீச்சர் அவனை திட்டி,டியூஷனுக்கு வரவேண்டாமென்று கூறியுள்ளார் .அதனால் அந்த மாணவன் டியூஷனுக்கு போகாமல் வீட்டிலிருந்ததால் வீட்டிலும் அவனை திட்டியுள்ளார்கள் .

இதனால் அந்த மாணவரின் கோபம் அந்த டீச்சரின் மீது திரும்பியது .அதனால் அந்த டீச்சரை பழி வாங்க துடித்தார் .அதற்காக அவர் சமூக ஊடகத்தை பயன்படுத்த முடிவு செய்தார் .தன்னுடைய உறவினர் ஒருவரின் உதவியுடன் அந்த டீச்சரின் வாட்ஸ் அப்பில் உள்ள போட்டோவை எடுத்து ,அதை மார்பிங் செய்தார் .பிறகு போலியாக அவர் பெயரில் ஒரு கணக்கை உருவாக்கி அதில் அவரை விபச்சார பெண்ணாக சித்தரித்தார் .அதில் அவருக்கு ஒரு இரவுக்கு 1500 ரூபாய் என்றும் பதிவிட்டார் .அதை பார்த்த பலர் அந்த டீச்சருக்கு இரவெல்லாம் போன் செய்து உறவுக்கு அழைத்துள்ளார்கள் .அதனால் மிகவும் மன உளைச்சலுக்குள்ளான அந்த டீச்சர் இது பற்றி சைபர் க்ரைம் போலீசில் புகார் கூறினார் .அந்த சைபர் க்ரைம் போலீசார் அந்த டீச்சரின் சமூக ஊடக கணக்கை ஆராய்ந்து பார்த்த போது அவரை ஒரு மாணவர் இப்படி ஆபாசமாக சித்தரித்தது கண்டுபிடிக்கப்பட்டது .அதன்பின்னர் அந்த மாணவரும் அவரின் உறவினரும் கைது செய்யப்பட்டார்கள் .