×

“சானிடைசரால் வைரசை எரிக்க சொன்னா ,காதலி முகத்தையா எரிப்பாங்க?”- கடன் தர மறுத்த காதலிக்கு நேர்ந்த கதி ..

சண்டிகரில் தனது காதலியிடம் 2000 ரூபாய் கடன் கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் அவரின் முகத்தில் கை கழுவும் சானிடைசரை கொட்டி தீவைத்து கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது. சண்டிகார் மாநிலம் ஷில்லாங்கில் நரேஷ் மற்றும் தாமினி ஆகிய இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர் . இருவரும் ஒன்றாக பீச் ,பார்க் என்று சுத்தி வந்தனர் .இந்நிலையில் அவரின் காதலன் நரேஷுக்கு திடீரென்று ஜூலை 6ம் தேதியன்று 2000 ரூபாய் பணம் தேவைப்பட்டது .அதனால் தன்னுடைய காதலியான தாமினியிடம் கடன்
 

சண்டிகரில் தனது காதலியிடம் 2000 ரூபாய் கடன் கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் அவரின் முகத்தில் கை கழுவும் சானிடைசரை கொட்டி தீவைத்து கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது.

சண்டிகார் மாநிலம் ஷில்லாங்கில் நரேஷ் மற்றும் தாமினி ஆகிய இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர் .
இருவரும் ஒன்றாக பீச் ,பார்க் என்று சுத்தி வந்தனர் .இந்நிலையில் அவரின் காதலன் நரேஷுக்கு திடீரென்று ஜூலை 6ம் தேதியன்று 2000 ரூபாய் பணம் தேவைப்பட்டது .அதனால் தன்னுடைய காதலியான தாமினியிடம் கடன் கேட்டார் .அதற்கு அவரின் காதலி தன்னிடம் பணமில்லை என்று கூறியுள்ளார் .இதனால் கடுப்பான நரேஷ் அப்போது அங்கிருந்த கொரானா வைரஸை விரட்ட வைத்திருந்த சேணிடைசரை எடுத்து காதலியின் முகத்தில் கொட்டி தீவைத்து கொளுத்திவிட்டு அங்கிருந்த தப்பி ஓடிவிட்டார் .

இதனால் முகத்தில் தீப்பிடித்து எரிந்து தாமினி அலறினார் .அப்போது அங்கிருந்தவர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சேர்த்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவரை காப்பாற்றினர் . .பிறகு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த தாமினி தன்னுடைய காதலன் நரேஷ் மீது போலீசில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து நரேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .