“குழந்தைகள் முதல் கிழவி வரை” -ஆன்லைனில் பலான பொம்மைகள் வாங்கியவர்கள் அதிர்ச்சி
ஆன்லைனில் சிறுவர் முதல் பெரியவர் வரை உபயோகிக்கும் பாலியல் பொருட்களை விற்ற ஒரு நபரை சிபிஐ போலீஸ் கைது செய்துள்ளது அதை வாங்கிய பலரின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது
உத்திரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் அன்பாராவில் உள்ள ஒருவர் ஆன் லைனில் அதாவது இன்ஸ்டாகிராம் ,பேஸ் புக் போன்ற வலைத்தளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிட்டு அதில் குழந்தைகளை முதல் அனைத்து வயது ஆண்கள் , பெண்களின் பாலியல் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் என்று விளம்பரம் செய்திருந்தார் .அந்த விளம்பரத்தை பார்த்த பலர் அவரிடம் ஆர்டர் கொடுத்து அந்த பலான சமாச்சாரங்களை பெற்றனர் .
இந்த சிறுவர்கள் ஆபாசப்படமும் அவர்கள் சம்பந்தப்பட்ட பலான பொருட்களின் விற்பனை பற்றிய விவரம் டெல்லியில் உள்ள சிபிஐ க்கு தெரிவிக்கப்பட்டது .இதனால் டெல்லியில் உள்ள சிபிஐ அதிகாரிகள் சைபர் கரைம் போலீஸ் மூலமாக அந்தப் பாலியல் சமாச்சாரங்களையும் , சிறுவர் ஆபாச படங்களை வெளியிட்டவர் விவரத்தை சேகரித்து அவரை கைது செய்தார்கள் .அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன .
அவர் வெவ்வேறு மின்னஞ்சல் ஐடிகளைப் பயன்படுத்தி கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் சட்ட விரோத சேவைகளில் பல கணக்குகளைத் திறந்து, சிறுவர் ஆபாசப் பொருட்களை சேமித்து வைத்திருந்ததையும் ,அவரோடு இந்தியா, நெதர்லாந்து, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளின் நபர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருப்பதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் சேவையகங்கள் வெவ்வேறு நாடுகளில் அமைந்திருந்தன மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோத்துக்கான பொருள்கள் அதில் பதிவேற்றப்பட்டு மிக நீண்ட காலமாக விற்பனை செய்யப்பட்டதை கண்டறிந்து அதை வாங்கிய நபர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள் .