×

“எப்பவும் ஆன்லைனில் இருக்கே ,அதுவும் ஆண்நண்பரோடு இருக்கே” -தங்கையை சுட்ட அண்ணண்

ஒரு தங்கை எந்நேரமும் சமூக ஊடகத்தில் ஆண் நண்பரோடு அரட்டையடித்து வந்ததால் கோபமுற்ற அவரின் சகோதரர் அவரை துப்பாக்கியால் சுட்டார் . டெல்லியின் வெல்கம் வட்டாரத்தில் ஒரு 16 வயது டீனேஜ் பெண்ணும் அவரின் 17 வயது சகோதரரும் வசித்து வந்தார்கள் . அந்த தங்கை எந்நேரமும் இணைய தளத்திலும் செல்போனிலும் ஆண் நண்பரோடு அரட்டையடித்து வந்துள்ளார் .இது அவரின் சகோதரருக்கு பிடிக்கவில்லை .அதனால் அவர் தங்கையை கண்டித்துள்ளார் .ஆனால் அவரின் தங்கை அவரின் பேச்சை கேட்காமல்
 

ஒரு தங்கை எந்நேரமும் சமூக ஊடகத்தில் ஆண் நண்பரோடு அரட்டையடித்து வந்ததால் கோபமுற்ற அவரின் சகோதரர் அவரை துப்பாக்கியால் சுட்டார் .

டெல்லியின் வெல்கம் வட்டாரத்தில் ஒரு 16 வயது டீனேஜ் பெண்ணும் அவரின் 17 வயது சகோதரரும் வசித்து வந்தார்கள் . அந்த தங்கை எந்நேரமும் இணைய தளத்திலும் செல்போனிலும் ஆண் நண்பரோடு அரட்டையடித்து வந்துள்ளார் .இது அவரின் சகோதரருக்கு பிடிக்கவில்லை .அதனால் அவர் தங்கையை கண்டித்துள்ளார் .ஆனால் அவரின் தங்கை அவரின் பேச்சை கேட்காமல் மீண்டும் மீண்டும் அந்த ஆண் நண்பரோடு அரட்டையடித்து வந்துள்ளார் .

இந்த விஷயம் அவரின் அண்ணனை மிகவும் பாதித்து விட்டது .அதனால் தன்னுடைய தங்கையை எப்படி திருத்துவது என்று புரியாமல் விழித்து வந்தார் .  கடந்த வியாழக்கிழமை காலை, அந்த சிறுவன் மீண்டும் அந்த நண்பனுடன் தனது தங்கை  அரட்டையடிப்பதைக் கண்டார் . அதைத் தொடர்ந்து அவர்களுக்கு இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடுமையான ஆத்திரப்பட்ட ,அந்த  சிறுவன் துப்பாக்கியைக் கொண்டு வந்து அந்த தங்கையின் வயிற்றில் சுட்டான் .

இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சிறுமியை அவரது பெற்றோர் உடனடியாக பிராவேஷ் சந்திர மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .இதற்கிடையே மருத்துவமனை அதிகாரிகள் இந்த சம்பவத்தை  போலீசில் தெரிவித்தனர்

 அதைத் தொடர்ந்து சிறுவனுக்கு எதிராக கொலை முயற்சி குற்றம் பதிவு செய்யப்பட்டது.அதனால்  அவர் கைது செய்து சிறையில்  வைக்கப்பட்டார். போலீஸ் விசாரணையின் போது, ​​சில மாதங்களுக்கு முன்பு இறந்த தனது நண்பரிடமிருந்து அந்த துப்பாக்கியைப் பெற்றதாக போலீசாரிடம் அவர்  கூறினார். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.