×

`எனது ஆசைக்கு ஒத்துழைக்கவில்லை; கல்லைப் போட்டு கொன்றுவிட்டேன்!’- இளம்பெண் கொலையில் சிறுவன் அதிர்ச்சி வாக்குமூலம்

வனப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணை 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இந்த பெண் ஒத்துழைக்காததால் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளான் சிறுவன். அவனை கைது செய்த காவல்துறையினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ஆத்துக்காடு பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி (பெயர் மாற்றம்). 27 வயதான இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணமாகியுள்ளது. கணவர் இறந்துவிட்டார். இவருக்கு 6 வயதிலும், 2 வயதிலும் பெண் குழந்தைகள்
 

வனப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணை 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இந்த பெண் ஒத்துழைக்காததால் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளான் சிறுவன். அவனை கைது செய்த காவல்துறையினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ஆத்துக்காடு பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி (பெயர் மாற்றம்). 27 வயதான இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணமாகியுள்ளது. கணவர் இறந்துவிட்டார். இவருக்கு 6 வயதிலும், 2 வயதிலும் பெண் குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த 12ம் தேதி நண்பகல் கீரைக்காடு வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆத்துக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆடு மேய்க்கச் சென்ற செல்வி இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அம்மா வீடு திரும்பாததை உறவினர்களிடம் பிள்ளைகள் கூறியுள்ளனர். இதனால், உறவினர்கள் இரவு முழுவதும் செல்வியை தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, கொல்லிமலை வாழவந்தி நாடு காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து கீரைக்காடு வனப்பகுதியில் காவல்துறையினர் செல்வியை தேடினர். அப்போது, ஓடைக்கரையில் செல்வி கொண்டு சென்ற துணிகள் கிடந்ததை கண்டுபிடித்த காவல்துறையினர், அதன் அருகில் உள்ள காப்புக்காட்டுக்குள் சென்று பார்த்தபோது செல்வி நிர்வாணமான நிலையில் சடலமாகக் கிடந்தார். அவருடைய வாய் பாவாடையால் கட்டப்பட்டிருந்தது. உடலில் பல இடங்களில் ரத்த காயங்களும், கற்களால் தாக்கியதற்கான அடையாளங்களும் இருந்தன. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத ப‌ரிசோதனை‌ முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, செல்வியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதனை கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, செல்வியின் கிராமைத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக அக்கப்பக்கத்தினர் கூறியதையடுத்து, சிறுவனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுவன் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தான். இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய கிடுக்கிபிடி விசாரணையில், செல்வியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளான். இதையடுத்து, சிறுவனை நீதிபதி முன் ஆஜர்படுத்திய காவல்துறையினர், கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

முன்னதாக அந்த சிறுவன் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், “காட்டுப் பகுதியில் ஆடு மேய்க்க செல்லும் செல்வியை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள ஆசைப்பட்டேன். சில மாதங்களாக அவரை பின்தொடர்ந்து சென்று வந்தேன். கடந்த 12 ஆம் தேதி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக செல்வி காட்டுப்பகுதிக்கு ஓட்டிச் செல்வதை பார்த்தேன். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை அவிழ்த்து விட்டார். பின்னர், மொக்கசடையன் கோயில் அருகே உள்ள ஆற்று ஓடையில் பாவாடை அணிந்தபடி துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஆடு, மாடுகள் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்றன. அதனைப் பார்த்த செல்வி, கால்நடைகளை விரட்டி விடுவதற்காகச் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றேன். ஆனால் எனது ஆசைக்கு செல்வி ஒத்துழைக்கவில்லை. இதனால் அவரை கட்டாயப்படுத்தி தாக்கினேன். இதில் காயமடைந்த செல்வி அலறினார். இதனால் அவர் அணிந்திருந்த பாவாடையை உருவி வாயில் வைத்து கட்டி தாக்கினேன். அப்போதும் எனது ஆசைக்கு அவர் ஒத்துழைக்க வில்லை. அங்கிருந்து அவர் ஓட முயன்றார். நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் பிரச்னையாகிவிடும் என பயந்தேன். இதனால் கல்லை எடுத்து செல்வியின் தலையில் போட்டு கொலை செய்தேன்” என்று கூறியுள்ளான்.