×

மூன்று குழந்தைகளோடு தற்கொலை செய்து கொண்ட கிரண் -தப்பிய ஒரு வயது குழந்தை அனாதையான அவலம்..

ஒரு தாய் தன்னுடைய 5மற்றும் 6 வயது பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் .இந்த தற்கொலை சம்பவத்தில் அவரின் ஒரு வயது குழந்தை தப்பித்து அருகே அழுது கொண்டிருந்தது . டெல்லியின் மண்டாவலி ரயில் நிலையம் அருகே ரிஷா தொழிலாளியாக இருப்பவர் ராகேஷ் இவருக்கு கிரண் என்ற 30 வயது மனைவியும் ஐந்து மற்றும் ஆறு வயது மகளும் ,ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது .இவர்கள் அந்த ரயில்நிலையத்தின்
 

ஒரு தாய் தன்னுடைய 5மற்றும் 6 வயது பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் .இந்த தற்கொலை சம்பவத்தில் அவரின் ஒரு வயது குழந்தை தப்பித்து அருகே அழுது கொண்டிருந்தது .

டெல்லியின் மண்டாவலி ரயில் நிலையம் அருகே ரிஷா தொழிலாளியாக இருப்பவர் ராகேஷ் இவருக்கு  கிரண் என்ற 30 வயது மனைவியும் ஐந்து மற்றும் ஆறு வயது மகளும் ,ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது .இவர்கள் அந்த ரயில்நிலையத்தின் அருகே உள்ள காலனியில் வசித்து வந்துள்ளனர் .
வியாழக்கிழமை அதிகாலை டெல்லியின் மண்டாவலி ரயில் நிலையத்தில் அந்த தாயும் ,ஐந்து மற்றும் ஆறு வயது மகளும் தற்கொலை செய்துகொண்டு ,ரயில் தண்டவாளத்தில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்கள் .

அருகில் ஒரு வயது சிறுவன் அழுது கொண்டிருந்தான் .இதை கேள்விப்பட்ட போலீசார் விரைந்து வந்து அவரின் கணவர் ராகேஷினை விசாரித்தபோது, அவர் தன்னுடைய மனைவிக்கு மனநிலை பாதிப்பு இருந்ததாகவும் ,அதனால் அவருக்கு குழந்தைகளை பிடிக்காமல் வெறுத்து வந்ததாகவும் ,இதன் காரணமாக நேற்று இரவு குழந்தைகளை கூட்டி வந்து , முதலில் குழந்தைகளை ரயிலில் தள்ளிவிட்டு பிறகு கிரண் தற்கொலை செய்து கொண்டதாகவும் ,இதில் ஒரு வயது சிறுவன் தப்பித்ததாகவும் அவர் கூறினார்
போலீசார் இந்த தற்கொலை சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .