×

மகன் பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருந்த பாஜக நிர்வாகி படுகொலை!

பாஜக நிர்வாகி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகேயுள்ள குந்துமாரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாத். இவருக்கு கீதா என்ற மனைவியும் தனுஞ்செயா மற்றும் ருஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். 35 வயதான இவர் பாஜகவில் ஒன்றிய இளைஞரணி தலைவராக உள்ளார். இந்நிலையில் ரங்கநாத் மகன் தனுஞ்செயாவின் பிறந்த நாளை வீட்டில் கொண்டாடி கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை தாக்கியுள்ளனர். பின்னர் அவரை ஓட ஓட விரட்டி பயங்கர
 

பாஜக நிர்வாகி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகேயுள்ள குந்துமாரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாத். இவருக்கு கீதா என்ற மனைவியும் தனுஞ்செயா மற்றும் ருஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். 35 வயதான இவர் பாஜகவில் ஒன்றிய இளைஞரணி தலைவராக உள்ளார்.

இந்நிலையில் ரங்கநாத் மகன் தனுஞ்செயாவின் பிறந்த நாளை வீட்டில் கொண்டாடி கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை தாக்கியுள்ளனர். பின்னர் அவரை ஓட ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஓசூர் கெலமங்கலம் சாலையில் கிராம மக்கள் கொலைக்கு உரிய நீதி கேட்டு மறியலில் ஈடுப்பட்டனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்த பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட ரங்கநாத்துக்கும் போத்தசந்திரம் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே போத்தசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் என்பவரின் மரக்கடை சூறையாடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீ சார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.