வேலைக்காக தமிழகம் வந்த பீகார் இளைஞரின் மனைவி வன்கொடுமை செய்து கொலை! 2 வயது குழந்தையையும் கொன்ற கும்பல்
பீகாரை சேர்ந்த 24 வயது இளைஞர் தனது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையுடன் வேலை தேடி சென்னை வந்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக வேலை சேர்ந்த அந்த இளைஞர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு குடியிருப்பில் தனியாக இருந்த இளைஞரின் மனைவியிடம் அத்துமீறிய மர்மகும்பல், அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பீகார் இளைஞரை மர்மநபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அந்த இளைஞரை மர்ம நபர்கள் அடித்தே கொலை செய்துள்ளனர். தாய், தந்தையை இழந்து கண்ணீர்விட்டு கதறிக்கொண்டிருந்த அவர்களின் 2 வயது ஆண் குழந்தையையும், அந்த மர்மகும்பல் கொடூரமாக கொலை செய்தது. பின்னர் பீகார் இளைஞரின் உடலை சாக்குமூட்டையில் கட்டி அடையாறு இந்திரா நகர் ஆற்றங்கரையோரம் அந்த கும்பல் வீசி சென்றது. பெண்ணின் உடல் மற்றும் குழந்தையின் உடலை தேடி வரும் நிலையில் பெருங்குடி குப்பை கிடங்கு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது
சம்பவத்தை குறித்து ஐந்து நபர்களை கைது செய்து அடையார் போலீசார் விசாரித்து வருகின்றனர். குப்பை கிடங்கில் பெண்ணின் உடல் மற்றும் குழந்தையின் உடலை போலீசார் தேடி வரும் நிலையில் பெருங்குடி குப்பை கிடங்கு போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது உடலை தேடும் இடத்தில் தேவையில்லாத ஆட்களை அனுமதிக்கவில்லை