×

"டேய் பியூட்டி பார்லர் நடத்தற என்னை விடுங்கடா" -அழகு நிலைய பெண்ணை அழுகிய நிலையில் அடைக்க என்ன காரணம்?  

 

அழகு நிலைய பெண் உரிமையாளர் ஒருவரை சிலர் பல துண்டுகளாக வெட்டி பெட்டிக்குள் அடைத்து வீசி சென்றதால் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது 

தமிழக்தின் சேலம் வின்சென்ட் பகுதியில் வங்காள தேசத்தை 27வயதான பெண்  தேஜ்மண்டல் ,  வாடகைக்கு வீடு எடுத்து அதில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார்.அவரின் அழகு நிலையத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்து வந்தனர் .அப்பெண்  தேஜ்மண்டலுக்கு திருமணமாகி முகமது ராக்கி என்ற கணவரும், 5 வயதில் ஒரு குழந்தையும்  உள்ளது.. 
அவர்கள் தேஜ்மண்டலின் சொந்த ஊரான வங்காள தேசம் குமிளா மாகாணத்துக்குட்பட்ட போத்தாளி என்ற பகுதியில் உள்ளனர்.ஆனால் தற்போது அந்த பெண்ணுடன் சேலத்தில் உள்ள வீட்டில்  அவரது நண்பர்கள் லப்லு, ரிஷி ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 15-ந் தேதி தேஜ்மண்டல் படுகொலை செய்யப்பட்டார். 
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிய வந்தது .அதனால் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். 
இப்போது நடந்த விசாரணையில் தேஜ்மண்டலுடன் இருந்த லப்லு, ரிஷி ஆகியோர் கொலை நடந்த நாளில் இருந்து தலைமறைவாகி உள்ளனர். மேலும் இந்த கொலை குறித்து வங்காள தேசத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அங்குள்ள அதிகாரிகள் மூலம்  விசாரணை நடக்கிறது . மேலும் போலீசார் கொலையான பெண்ணின் கணவர்  முகமது ராக்கியை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி உள்ளனர் . மேலும் அவரை சேலத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர் . மேலும் இந்த கொலை குறித்து தேஜ்மண்டலுடன் தொடர்பில் இருந்த 100-க்கும் மேற்பட்டவர்களிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.