×

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர் கொலை

புதுச்சேரியில் மது அருந்திய\போது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ குத்திக் கொலை செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த உறுவையாறு பேட்சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன்(35). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருடன் இணைந்து பெட்ரோல் பங்க் பகுதியில் மதுஅருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை, அந்த நபர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் வெங்கடேசன் உயிரிழந்த நிலையில், அவர் தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் அங்குசென்ற மங்கலம் போலீசார், கொலை குறித்து
 

புதுச்சேரியில் மது அருந்திய\போது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ குத்திக் கொலை செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த உறுவையாறு பேட்சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன்(35). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருடன் இணைந்து பெட்ரோல் பங்க் பகுதியில் மதுஅருந்தி உள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை, அந்த நபர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் வெங்கடேசன் உயிரிழந்த நிலையில், அவர் தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் அங்குசென்ற மங்கலம் போலீசார், கொலை குறித்து அறியாமல் சடலத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததை அடுத்து, போலீசார் கொலை வழக்காக மாற்றி குற்றவாளியை தேடி வருகின்றனர்.