×

சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சி- வழக்குப்பதிய தாமதித்த எஸ்.ஐ பணியிடமாற்றம்

புதுச்சேரி புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய தாமதித்த காவல் உதவி ஆய்வாளர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதுச்சேரி திருக்கனூர் அடுத்த கூனிச்சம்ப்பட்டு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அப்பகுதியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள சவுக்கு தோப்புக்கு இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற பிரம்மன் (36), மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்து மரத்தில்
 

புதுச்சேரி

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய தாமதித்த காவல் உதவி ஆய்வாளர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதுச்சேரி திருக்கனூர் அடுத்த கூனிச்சம்ப்பட்டு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அப்பகுதியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள சவுக்கு தோப்புக்கு இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற பிரம்மன் (36), மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்து மரத்தில் கட்டிவைத்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அம்மாணவி சத்தமிடவே கார்த்திக் அங்கிருந்து பயந்து ஓடிய, நிலையில் மாணவி இரவு முழுவதும் மரத்தில் கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில், சவுக்குத் தோப்பில் கட்டியிருந்த சிறுமியை அப்பகுதி மக்கள் மீட்டு.பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அப்போது காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் வழக்குப்பதியாமல் அலட்சியம் கட்டியதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக ஏடிஜிபி ஆனந்த மோகனனுக்கு அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, உதவி ஆய்வாளர் சிவகுமார்
ஆயுதப்படைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.