“முதலில் படுக்கலாம் ,அப்புறம் படிக்கலாம்” -கல்வி ஆஷ்ரமத்தில் 10 சிறுவர்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை..
ஆஷ்ரமத்தில் அநியாயம் நடப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது .ஏற்கனவே நித்யானந்தா ஆசிரமத்தின் மீது ஏராளமான பாலியல் மற்றும் ஆள்கடத்தல் புகார் வந்து வழக்கு நடந்து வரும் நிலையில் ,இப்போது உ.பி .யில் உள்ள ஒரு ஆசிரமத்தின் மீது சிறுவர்களை பாலியல் கொடுமை செய்ததாக புகார் வந்துள்ளது.
முசாஃபர்நகரில் உள்ள கோடியா மடத்தில் ஏராளமான ஏழை சிறுவர்களுக்கு கல்வி இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது .இந்நிலையில் அங்கு மிசோரம் .திரிபுரா ,அஸ்ஸாமிலிருந்து 10க்கும் மேற்பட்ட 7 வயது முதல் 15 வயது சிறுவர்கள் தங்கி படிப்பதற்காக வந்துள்ளனர் .ஆனால் அவர்களுக்கு கல்வி சொல்லி கொடுக்காமல் ,அவர்களை அந்த ஆசிரமத்தின் உரிமையாளர் சுவாமி பக்தி பூஷன் மகாராஜ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகார் வந்துள்ளது .மேலும் அந்த சிறுவர்களை அடித்து உதைத்து அவர்களை ஆடு மாடுகளை மேய்க்க விட்டுள்ளனர்.