×

காதலியின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிந்த காதலன் ! உத்தரபிரதேசத்திலும் ஒரு “காசி” கைது !

தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியில் காசி என்பவன் 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் பழகி ஆபாச படங்கள் எடுத்து மிரட்டி பணம் சம்பாதித்து வந்த சம்பவம் அனைவருக்கும் தெரியும். இதே பாணியில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவிலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. மே 3 ம் தேதி, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தை அணுகியதன் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முன்னாள் காதலியின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக ஒருவர் கைதான நிலையில் மேலும் 4 பேரை
 

தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியில் காசி என்பவன் 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் பழகி ஆபாச படங்கள் எடுத்து மிரட்டி பணம் சம்பாதித்து வந்த சம்பவம் அனைவருக்கும் தெரியும்.
இதே பாணியில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவிலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. மே 3 ம் தேதி, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தை அணுகியதன் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
முன்னாள் காதலியின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக ஒருவர் கைதான நிலையில் மேலும் 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்கள் நிறைய பெண்களின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் குறைந்தது 500 பேருக்கு அனுப்பி உள்ளனர்.


இதுகுறித்து டி.சி.பி பிருந்தா சுக்லா கூற்றுப்படி, ஆபாச படங்கள் விற்பனையாளர்கள் குறைந்தது 500 பேர் இருப்பதாகவும், அவர்களுக்கு தற்போது போலீசால் பிடிக்கப்பட்டுள்ள 4 பேர்தான் வீடியோக்களை அனுப்புவதாகவும் கூறியுள்ளார். ஆபாச படங்கள் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நபர்களை மேற்கு வங்கத்தில் கைது செய்தது போலீஸ்.
ஐ.டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த பின்னர் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அதிகாரிகள் அந்த நபர்களைப் பற்றி பெண்களிடம் கேட்டு அறிந்தது மட்டுமின்றி அவர்களின் முன்னாள் காதலர்களை மேற்கு வங்கத்தின் பாருபூர் மாவட்டத்தில் வைத்து கைதும் செய்துள்ளனர்.