×

“அழுது கொண்டே இருந்தார் ,கழுத்தை நெறித்து கொன்றார்” -தந்தையால் மகளுக்கு நேர்ந்த நிலை

தன்னுடைய மகள் தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால், கோபமுற்ற தந்தை அவரின் கழுத்தை நெரித்து கொன்று, பிணத்தை சாலையில் வீசி சென்ற சம்பவம் பலரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் நொய்டாவில் வசிக்கும் வசுதேவ குப்தா என்ற ஆட்டோ டிரைவர் தன்னுடைய நன்கு வயது மகள் மற்றும் மூன்று வயது மகன் மற்றும் மனைவியொடு வசித்து வந்தார் .இந்நிலையில் கடந்த வாரம் அவருக்கும் அவரின் மனைவிக்குமிடையே சண்டை வந்தது .அதனால் அவரின் மனைவி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு
 

தன்னுடைய மகள் தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால், கோபமுற்ற தந்தை அவரின் கழுத்தை நெரித்து கொன்று, பிணத்தை சாலையில் வீசி சென்ற சம்பவம் பலரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது


உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் நொய்டாவில் வசிக்கும் வசுதேவ குப்தா என்ற ஆட்டோ டிரைவர் தன்னுடைய நன்கு வயது மகள் மற்றும் மூன்று வயது மகன் மற்றும் மனைவியொடு வசித்து வந்தார் .இந்நிலையில் கடந்த வாரம் அவருக்கும் அவரின் மனைவிக்குமிடையே சண்டை வந்தது .அதனால் அவரின் மனைவி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு போய் விட்டார் .
அதனால் தன்னுடைய பிள்ளைகளோடு தனியே வசித்து வந்தார் அந்த ஆட்டோ டிரைவர்.அதனால் கடந்த வாரம் வியாழக்கிழமை அவரின் நாலு வயது பெண் குழந்தை ஓயாமல் அழுது கொண்டிருநந்தது .அதனால் கோபமுற்ற அந்த ஆட்டோ டிரைவர் அவரின் மகளை கழுத்தை நெரித்து கொன்று விட்டார் ..பின்னர் இறந்த தன்னுடைய மகளின் பிணத்தை எடுத்துக்கொண்டு தன்னுடைய மனைவியை தேடி ஆட்டோவிலேயே சுற்றினார் .ஆனால் அவரின் மனைவியை எங்கும் கண்டுபிடிக்க முடியாததால் அவரின் மகளின் பிணத்தை அவரின் மனைவி வேலை செய்யும் ‘ஸ்பா’ வுக்கு அருகே வீசிவிட்டு சென்று விட்டார் .
மறுநாள் வாசுதேவின் தம்பி ரவி அவரின் வீட்டில் வந்து தேடிய போது,அங்கு யாருமில்லாததால் சந்தேகப்பட்டு போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த ஆட்டோ ட்ரைவரை பிடித்து விசாரித்தார்கள் .அப்போது அவரின் மகளை கொலை செய்த விவகாரம் வெளியே தெரிந்தது .பின்னர் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.