×

“3 மாதங்களாக பேரன், பேத்திகளை பார்க்க முடியாத நிலை” : சீர்காழியில் வயதான தம்பதி தற்கொலை!

நாகை மாவட்டம் சீர்காழி பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்சாமி. 70 வயதான இவருக்கு பாக்கியவதி என்ற மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர், அருள்சாமி மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி சென்னை மற்றும் நெய்த வாசல் போன்ற பகுதிகளில் வசித்து வந்துள்ளனர். வயதான காலத்தில் இந்த தம்பதி தனியாக வசித்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பால் இவர்களை அவரது பிள்ளைகளால் வந்து பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று
 

நாகை மாவட்டம் சீர்காழி பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்சாமி. 70 வயதான இவருக்கு பாக்கியவதி என்ற மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர், அருள்சாமி மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி சென்னை மற்றும் நெய்த வாசல் போன்ற பகுதிகளில் வசித்து வந்துள்ளனர்.

வயதான காலத்தில் இந்த தம்பதி தனியாக வசித்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பால் இவர்களை அவரது பிள்ளைகளால் வந்து பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக பிள்ளைகள் மற்றும் பேரன், பேத்திகளை பார்க்க முடியாமல் இந்த தம்பதி மனக்கவலையில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அருள்சாமி- பாக்கியவதி தம்பதி மன உளைச்சலில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வயதான தம்பதியின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து தாய் தந்தை இறந்த செய்தியைக் கேட்டு அவரது பிள்ளைகள் வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தியதால் இறந்த தாய் தந்தையை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.