×

“குடிக்கு அடிமையான மனைவி -அடிக்கு அடிமையான கணவன்” – குடிபோதையில் புருஷனை உதைத்து கொன்ற பாசக்கார மனைவி.

குஜராத் மாநிலம் வதேராவில் புணி என்ற 35 வயதான பெண் தன்னுடைய கணவர் ராஜேஷுடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண் புணி குடிப்பழக்கத்துக்கு அடிமையானார் .இதனால் அவர் குடித்துவிட்டு வந்து தினமும் புருஷனை போடு உதைப்பாராம் .வழக்கமா புருஷன் குடிகாரனா இருப்பான் அவன் குடிச்சிட்டு வந்து பொண்டாட்டிய உதைப்பான்னுதான் நாம கேள்விப்பட்டிருக்கோம் .ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக இருந்தது . கடந்த ஆகஸ்ட் 3ம் தேதியன்று அதிகமா குடிச்சிட்டு வந்த அவரின் மனைவி புணி தன்னுடைய
 

குஜராத் மாநிலம் வதேராவில் புணி என்ற 35 வயதான பெண் தன்னுடைய கணவர் ராஜேஷுடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண் புணி குடிப்பழக்கத்துக்கு அடிமையானார் .இதனால் அவர் குடித்துவிட்டு வந்து தினமும் புருஷனை போடு உதைப்பாராம் .வழக்கமா புருஷன் குடிகாரனா இருப்பான் அவன் குடிச்சிட்டு வந்து பொண்டாட்டிய உதைப்பான்னுதான் நாம கேள்விப்பட்டிருக்கோம் .ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக இருந்தது .


கடந்த ஆகஸ்ட் 3ம் தேதியன்று அதிகமா குடிச்சிட்டு வந்த அவரின் மனைவி புணி தன்னுடைய அம்மா வீட்டுக்கு போயிருக்கிறார் .அப்போது அவரின் 52 வயது கணவன் ராஜேஷ் தன்னுடைய மனைவியை தேடி அங்கும் போயிருக்கிறார் .அப்போது அவர் தன்னுடைய மனைவியை வீட்டிற்கு கூப்பிட்டுள்ளார் ,ஆனால் அவரின் மனைவியோ அதற்கு சம்மதிக்காததால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .அப்போது அவரின் மனைவி அவரை போட்டு உதைத்துள்ளார் . இதில் பலத்த காயமடைந்த அவர் அந்த இடத்திலேயே இறந்துள்ளார் .
பிறகு கணவரின் சடலத்தினை அவரின் அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் .தன்னுடைய பிள்ளையின் உடம்பில் நிறைய காயங்கள் இருப்பதை பார்த்த அவரின் தாயார் தன்னுடைய மருமகள் மீது போலீசில் புகாரளித்தார் .அப்போது நடந்த போலீஸ் விசாரணையில் அவரின் மனைவியே குடிபோதையில் தன்னுடைய கணவன் ராஜேஷை கொலை செய்த விவரம் தெரிந்து, அந்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர் .