“உன்னை கொடுத்தால் வேலை கொடுப்பேன்” -வேலை கேட்ட பெண்ணிடம் வேலையை காமித்த விமான நிறுவன மேனேஜர்.
ஒரு விமான நிறுவன மேலாளர் தனக்கு வேலை கொடுக்க பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு பெண் புகார் கூறியுள்ளார் .
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் விமான நிறுவனத்தில் ஒருவர் மேனேஜராக பணியாற்றுகிறார் .அந்த நிறுவனத்தில் சமீபத்தில் பல வேலைகளுக்கு ஆட்கள் தேவையென்று விளம்பரம் செய்யப்பட்டது .அந்த விளம்பரத்தை பார்த்த ஒரு பெண், அந்த நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தார் .அந்த பெண்ணின் அப்ளிகேஷனை பார்த்த அந்த மேனேஜர் அந்த பெண்ணுக்கு போன் செய்து தன்னை தனியாக சந்திக்குமாறு கூறியுள்ளார் .அவரின் பேச்சை நம்பிய அந்த பெண் அவரை சந்திக்க அவர் சொன்ன இடத்திற்கு சென்றார் .
அப்போது அந்த மேனேஜர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார் .இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரிடம் இது பற்றி கேட்டதற்கு, அவர் உன்னை எனக்கு தந்தால் இந்த வேலையை உனக்கு தருவேன் என்று டீலிங் பேசியுள்ளார் .அதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரிடமிருந்து தப்பி வந்தார். .அதன் பிறகு அந்த மேனேஜர் மீது போலீசில் புகார் தந்தார் .அப்போது அவர் தந்த புகாரில் ,அந்த மேலாளர் தன்னைப்போல் அவரின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பல பெண்களிடம் இதேபோல் பலான வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் ,அவர்கள் அதை வெளியே சொன்னால் வேலையை விட்டு அவர்களை தூக்கி விடுவதாக அவர்களை மிரட்டுவதால் அவர்கள் புகாரளிக்கவில்லை என்று கூறினார் .
போலீசார் இந்த புகார் பற்றி அந்த மேனேஜரிடம் கேட்ட போது அந்த பெண்னுக்கு வேலை கொடுக்காத காரணத்தால் கோவத்தில் தன் மீது வேண்டுமென்றே இப்படி அவதூறு கூறியதாக கூறினார் . போலீசார் அவரின் புகாரின் பேரில் மேற்கொண்டு விசாரித்து வருகிறார்கள் .