×

`நள்ளிரவில் வேட்டை; சுட்டுக்கொல்லப்பட்ட வாலிபர்!’- ஊத்தரங்கரையில் நடந்த பயங்கரம்

நள்ளிரவில் மான் வேட்டைக்கு சென்ற வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஊத்தரங்கரையில் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ளது இளவம்பாடி காப்புக்காடு பகுதியில் அதிகமாக மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த காட்டுக்குள் பெருமாள் கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன் (21), அவரது நண்பரான மகனூர்பட்டியை சேர்ந்த சிவா (35) ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் மான் வேட்டைக்கு சென்றுள்ளனர். சுருக்கு வலையுடன் மான்
 

நள்ளிரவில் மான் வேட்டைக்கு சென்ற வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஊத்தரங்கரையில் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ளது இளவம்பாடி காப்புக்காடு பகுதியில் அதிகமாக மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த காட்டுக்குள் பெருமாள் கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன் (21), அவரது நண்பரான மகனூர்பட்டியை சேர்ந்த சிவா (35) ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் மான் வேட்டைக்கு சென்றுள்ளனர்.

சுருக்கு வலையுடன் மான் வேட்டைக்கு சென்ற அவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளன். இதில் கமலக்கண்ணனின் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்தது. இதனால் அதிர்ந்துபோன சிவா அங்கிருந்து தப்பிச் சென்று கமலக்கண்ணனின் குடும்பத்தினரிடம் தகவலை கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் காட்டிற்குள் சென்றனர். அங்கு கமலக்கண்ணன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை காவல்துறையில் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். நள்ளிரவில் வேட்டைக்கு சென்ற வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.