காதலை ஏற்க மறுத்ததால் 22 வயது பெண்ணை பேருந்து நிலையத்தில் கொடூரமாக கொலை செய்த இளைஞன்
கர்நாடக மாநிலம் மங்களூருவில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கொடூரமாக வெட்டிக்கொன்ற இளைஞரிடம் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
மங்களூரு அடுத்த பந்த்வாலில் உள்ள பிசி சாலையில் கே.எஸ்.ஆர்.டி.சி புதிய பேருந்து நிலையம் அருகே பெண் ஒருவர் அவரது காதலனால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தனியார் நர்சிங் ஹோமில் பணியாற்றி வந்த லாவண்யா(21) மாலை 6 மணியளவில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார். அவரது சொந்த ஊர் கக்கேபடவு . அப்போது அவரை ஒருதலையாக காதலித்துவந்த சேத்தன் என்ற இளைஞர் அங்கு வந்தார். லாவண்யா காதலை ஏற்க மறுத்ததால், சேத்தன் பேருந்து நிலையத்தில் அவரை கொடூரமாக கொன்றுவிட்டு தப்பியோடியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
The body of 22-year-old nurse Lavanya, who was allegedly murdered at the BC Road KSRTC bus stand on Thursday evening, was brought to Pushparaj Hospital in Kalladka on Friday, where colleagues, hospital staff and members of the public paid their last respects before her final… https://t.co/aGRtdmzS9j pic.twitter.com/nE19XbpAfd
— Hate Detector 🔍 (@HateDetectors) July 17, 2026
முதற்கட்ட தகவல்களின்படி, லாவண்யா கக்கேபடவு நோக்கிச் செல்வதற்காக ஒரு கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தினுள் இருந்தபோது, அவர் தொலைபேசியில் ஒரு உறவினரை அழைத்து, தனக்கு அருகில் ஒரு இளைஞன் அமர்ந்திருப்பதாகக் கூறியுள்ளார். அதன் பிறகு அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அவர் பேருந்திலிருந்து இறங்கியதும், அந்த இளைஞன் அவரைப் பின்தொடர்ந்து, தனது பையிலிருந்து அரிவாளை எடுத்து மூர்க்கத்தனமாகத் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். லாவண்யா தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓட கடுமையாக முயன்றபோதிலும், அவரை சேத்தன் பிடித்து கொடூரமாக கொலை செய்ததாகவும் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.