×

“பணம் கொடு ,இல்லேன்னா உயிரை விடு”-அப்பாவை சுட்ட அருமை மகன் -அதுக்கப்புறம் என்னாச்சி தெரியுமா ?..

தந்தை செலவுக்கு பணம் தராததால் கடுப்பான டீனேஜ் மகன் ,தந்தையை துப்பாக்கியால் சுட்டபோது குண்டு குறி தவறி ,அருகிலிருந்த சிறுவன் மீது பாய்ந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது . ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் மருத்துவர் மகேஷ் ரத்தோர் என்பவர் சொந்தமாக ஒரு கிளினிக் நடத்தி வந்தார் .அவருக்கு ஆதித்யா என்று ஒரு டீனேஜ் மகன் .அவர் தனது டாக்டர் தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வார் .. கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலையில் ரத்தோர்
 

தந்தை செலவுக்கு பணம் தராததால் கடுப்பான டீனேஜ் மகன் ,தந்தையை துப்பாக்கியால் சுட்டபோது குண்டு குறி தவறி ,அருகிலிருந்த சிறுவன் மீது பாய்ந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது .

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் மருத்துவர் மகேஷ் ரத்தோர் என்பவர் சொந்தமாக ஒரு கிளினிக் நடத்தி வந்தார் .அவருக்கு ஆதித்யா என்று ஒரு டீனேஜ் மகன் .அவர் தனது டாக்டர் தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வார் ..
கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலையில் ரத்தோர் தனது கிளினிக்கில் தருண்சர்மா என்ற 10 வயது சிறுவனுக்கு சிகிச்சையளித்துக்கொண்டிருந்தார்

அப்போது அங்கு வந்த டாக்டர் ரத்தோரின் மகன் ஆதித்யா தனது தந்தையிடம் 50 லட்சம் ரூபாய் பணமும் ,ஒரு காரும் உடனே வேண்டுமென கேட்டார் .அதற்கு ரத்தோர் மறுத்ததால் ,ஆத்திரமடைந்த ஆதித்யா தான் கொண்டு வந்த துப்பாக்கியை எடுத்து தனது அப்பாவை நோக்கி சுட்டார் .ஆனால் துப்பாக்கி குறி தவறி அங்கு சிகிச்சைக்கு வந்த தருண் என்ற 10 வயது சிறுவன் மீது மீது குண்டு பாய்ந்தது.இதனால் படு காயமடைந்த சிறுவனுக்கு அந்த மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .
இந்த சம்பவத்தால் பயந்து போன ஆதித்யா அங்கிருந்த தப்பி ஓடி விட்டார் .போலீசார் தகவல் கேள்விப்பட்டு விரைந்து வந்து குற்றவாளியினை கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர் .