திருமணத்தை மீண்டும் மீண்டும் ஒத்திவைத்த ஊரடங்கு ! வேதனையில் தற்கொலை செய்து கொண்ட மணமகன் !!
தொடர்ந்து ஊரடங்கு காரணமாக திருமண தேதி ஒத்திவைக்கப்பட்டதால் 30 வயது இளைஞர் ஒருவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சோக சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.
இந்த சம்பவம் ஒலிடி பொலிஸ் நிலையத்தின் எல்லைக்குள் நடந்தது. காவல்துறையினர் தற்கொலை வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனை செய்வதற்காக எம்ஜிஎம்-க்கு அனுப்பப்பட்டதாக தெரிகிறது.
திருமண தேதி ஒத்திவைக்கப்பட்ட பின்னர், மளிகை கடை நடத்தி வந்த சஞ்சித் மனச்சோர்வடைந்து தனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பேசுவதை நிறுத்தினார். திருமணம் நின்று போனதால் தற்கொலை செய்து கொள்ள போவதாக சஞ்சித் தெரிவித்தபோது அவரை பலர் சமாதானம் செய்தனர். ஆனால் அவர் கேட்க மறுத்துவிட்டார். சஞ்சித் இறப்பதற்கு முன்பு ராஜேந்திரா மேலும் இரண்டு மகன்களை இழந்துவிட்டார். அவரது மகன்களில் ஒருவர் 2000 ஆம் ஆண்டில் நீரில் மூழ்கி இறந்து போனார். மற்றொருவர் 2012 இல் காணாமல் போய்விட்டார்.