×

அண்ணனை ஓட ஓட அரிவாளால் வெட்டிய தம்பி : பதைபதைக்கும் சம்பவம்!

ஆரல்வாய்மொழி அருகே சொத்து தகராறில் அண்ணனை தம்பி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரிமாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சுப்பிரமணிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு (58). இவரது தம்பி நாகலிங்கம் (50). சுயம்புவின் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பணம் தேவைப்பட்டதால், சுயம்பு தனது வீட்டை வேறொரு நபருக்கு விற்றிருக்கிறார். இதில் நாகலிங்கத்திற்கு உடன்பாடு இல்லையாம். அந்த நிலத்தை தனக்கு கொடுக்கச் சொல்லி நாகலிங்கம் சுயம்புவை
 

ஆரல்வாய்மொழி அருகே சொத்து தகராறில் அண்ணனை தம்பி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரிமாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சுப்பிரமணிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு (58). இவரது தம்பி நாகலிங்கம் (50). சுயம்புவின் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பணம் தேவைப்பட்டதால், சுயம்பு தனது வீட்டை வேறொரு நபருக்கு விற்றிருக்கிறார். இதில் நாகலிங்கத்திற்கு உடன்பாடு இல்லையாம்.

அந்த நிலத்தை தனக்கு கொடுக்கச் சொல்லி நாகலிங்கம் சுயம்புவை வற்புறுத்தியதாகவும் அதை மீறி சுயம்பு வேறொருவருக்கு விற்று விட்டதாகவும் இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று தனது தென்னந்தோப்பில் தண்ணீர் பாய்ச்ச சென்ற சுயம்புவை பின்தொடர்ந்து நாகலிங்கம் சென்றிருக்கிறார். அங்கு உன் நிலத்தை தந்து விடு என்று சுயம்புவிடம் நாகலிங்கம் கூறியதால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த நாகலிங்கம் சுயம்புவை ஓட ஓட அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார். அவ்வழியே சென்றவர்கள் சுயம்புவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான நாகலிங்கத்தை வலைவீசி தேடி வருகிறார்கள்.