×

பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை : அதிர்ச்சி சம்பவம்!

சிறுகனூர் அருகே பிறந்த நாள் விழாவுக்கு சென்று திரும்பிய நபரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் அருகே வசித்து வந்தவர் முத்து (49). இவர் நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் ஒருவரின் பிறந்தநாள் விழாவுக்காக நேற்று இரவு சிறுகனூர் பகுதிக்கு சென்றுள்ளார். விழா முடிந்த பிறகு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த முத்துவை, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து
 

சிறுகனூர் அருகே பிறந்த நாள் விழாவுக்கு சென்று திரும்பிய நபரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் அருகே வசித்து வந்தவர் முத்து (49). இவர் நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் ஒருவரின் பிறந்தநாள் விழாவுக்காக நேற்று இரவு சிறுகனூர் பகுதிக்கு சென்றுள்ளார். விழா முடிந்த பிறகு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த முத்துவை, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

படுகாயம் அடைந்த முத்து, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள், அவரது சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில், விரைந்து வந்த போலீசார் முத்துவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முன் விரோதம் காரணமாக முத்து கொலை செய்யப்பட்டாரா? அலலத வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முத்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேர் போலீசாரிடம் சிக்கி இருப்பதாகவும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.