×

“ஜாலிக்கு நான் ,தாலிக்கு இன்னொருத்தனா” -வெறுத்த காதலன் காதலியை அறுத்த கொடுமை.

தான் காதலித்த பெண் தன்னை கட்டிக்க மறுத்ததால் கோபமுற்ற காதலன், அவரை பலமுறை கத்தியால் குத்தி விட்டு ஓடிய சம்பவம் பலரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது . ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்தில் லக்ராஹி கிராமத்தில் ஹஸ்ரத் என்பவர் அங்குள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார் .அந்த பெண்னும் இவரை காதலித்தார் .அதனால் இருவரும் ஒன்றாக அங்குள்ள பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர் .மேலும் பல பார்க் ,ஹோட்டல் ,பீச் என்று பல இடங்களில் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்
 

தான் காதலித்த பெண் தன்னை கட்டிக்க மறுத்ததால் கோபமுற்ற காதலன், அவரை பலமுறை கத்தியால் குத்தி விட்டு ஓடிய சம்பவம் பலரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது .

ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்தில் லக்ராஹி கிராமத்தில் ஹஸ்ரத் என்பவர் அங்குள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார் .அந்த பெண்னும் இவரை காதலித்தார் .அதனால் இருவரும் ஒன்றாக அங்குள்ள பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர் .மேலும் பல பார்க் ,ஹோட்டல் ,பீச் என்று பல இடங்களில் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர் .

பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பிய ஹஸ்ரத் அவரிடம் அது பற்றி கேட்ட போதெல்லாம் அவர் அதற்கு மறுத்துள்ளார் .ஏனெனில் அவர் வசதியானவர் ,ஆனால் ஹஸ்ரத் கொஞ்சம் ஏழ்மை நிலையிலிருப்பவர் .அது மட்டுமல்லாமல் இருவரும் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்களென்பதால் அந்த பெண்னின் வீட்டில் அவர்களின்  காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த பெண் கல்யாணத்துக்கு மறுத்து வந்துள்ளார் .மேலும் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார் .

பொறுத்து  பார்த்த ஹஸ்ரத் ஒரு நாள் நேரடியாக தன்னுடைய காதலியின் வீட்டிற்கு சென்று அவரை கல்யாணம்  செய்து கொள்ள கேட்டுள்ளார் .அப்போது அந்த நடந்த வாக்கு வாதத்தில் ஹஸ்ரத் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் அவரின் காதலியை பலமுறை பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார் .பின்னர் அந்த பெண்ணின் சகோதரரும் அங்குள்ள  இரண்டு தொழிலாளர்களும் சேர்ந்து  அவரை மன்ஜியோன்  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு  கார்வா மருத்துவமனைக்கும் பின்னர் ராஞ்சிக்கும் அனுப்பப்பட்டார். அந்த பெண்னின் வாக்குமூல  அறிக்கையை போலீசார் பதிவு செய்துள்ளனர்.இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.