×

"பழைய ஸ்பீட் உங்கிட்ட இல்லடா "- கள்ள காதலனை விரட்டிய காதலி -அடுத்து நேர்ந்த விபரீதம் 

 


கள்ளகாதலன் போர் அடித்து விட்டதால் அவரை கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்தனர் 

சண்டிகரில் வசிக்கும் 40 வயதான சந்தர் பாலு என்ற நபர் நகராட்சியின்  முன்னாள் ஊழியர் ஆவார் .அவருக்கு கல்யாணமாகி மனைவி மற்றும் சாஹில் என்ற டீனேஜ் வயதில் மகனிருக்கிறார் .இந்நிலையில் அந்த சந்தர் பாலுக்கு ஷாலு என்ற 42 வயதான பெண்ணோடு கள்ள காதல் ஏற்பட்டது .அதனால் அவர் அந்த ஷாலுவுக்கு செக்டார் 40 இல் வாடகை வீடு எடுத்து தங்க வைத்தார் .இருவரும் அந்த வீட்டில் ஒன்றாக தங்கியிருந்தனர். சந்தர் பாலுவின்  குடும்பமும் செக்டார் 40 இல் தங்கியிருந்தது.
இந்நிலையில் அந்த சந்தர்க்கும் அவரின் காதலி ஷாலுவுக்குமிடையே கள்ளக்காதலில் பிரச்சினை உருவானது .அவர் போர் அடித்து விட்டதால் ,அந்த பெண் அவரை இனி தன்னை பார்க்க வரக்கூடாது என்று விரட்டினார் .ஆனால் அந்த சந்தர் மீண்டும் அந்த ஷாலுவை தேடி வந்தார் .இந்நிலையில் அந்த ஷாலு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவர் உடலில் மதுவை ஊற்றி வைத்தார் .பின்னர் அவரின் மகன் சாஹில்க்கு போன் செய்து அவரின் தந்தை அதிகமாக குடித்து விட்டு இறந்து விட்டதாக கூறினார் உடனே அந்த சாஹில் போலீசை தொடர்பு கொண்டு புகார் கொடுத்தார்  .போலீசார் அந்த சந்தரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற் கொன்டதில் அந்த மனைவியே கொலை செய்ததை கண்டு பிடித்து அவரை  கைது செய்தனர்