சிறுமியை கடத்தி ஒரு மாதம் பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன்
15 வயது சிறுமியை ஆசை வார்த்தை சொல்லி அழைத்துச் சென்று ஒரு வீட்டில் தங்க வைத்து ஒரு மாத காலம் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார் 17 வயது சிறுவன். அச்சிறுவனை போலீசார் கைது செய்து குழந்தைகள் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலத்தில் பல்லியா என்கிற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த15வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் காதலித்து வந்திருக்கிறார். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுமியை ஆசை வார்த்தை சொல்லி தன்னுடன் அழைத்துச் சென்று இருக்கிறார்.
குஜராத் அழைத்துச் சென்று அங்கு ஒரு இடத்தில் அச்சிறுமியை தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். ஒருநாள் இரண்டு நாள் அல்ல; ஒரு மாத காலம் சிறுமியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.
இதற்கிடையில் தனது மகளை காணவில்லை என்று சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று வழக்கு பதிவு செய்து சிறுமியையும் சிறுவனையும் தேடி வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் சிறுவன் ஒரு மதத்திற்கு பின்னர் குஜராத்தில் இருந்து தனது கிராமத்திற்கு திரும்பி இருக்கிறார். வழியில் நாக்ரா நகரில் இருக்கும் கட்வார் மோர் அருகே அச்சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் சிறுமியை மீட்டுள்ளனர்.
சிறுமியிடம் என்ன நடந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். போலீசாரிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அச்சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள். சிறுவன் என்பதால் குழந்தைகள் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது நீதிமன்றம்.
சிறுமையை மாவட்ட மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர் அதிகாரிகள்.