×

சிறுமியை சீரழித்த தாய்மாமா! கழுத்தை அறுத்து வாயில் ஆசிட் ஊற்றி கொலை முயற்சி

 

ஆந்திர மாநிலம் நெல்லூரில் தாய் மாமாவே பாலியியல் சீண்டலில் ஈடுப்பட்டு மைனர் சிறுமியின் கழுத்தை அறுத்து வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம்,  நெல்லூர் புஜபுஜ  நரிக்குறவர் காலனியில் வசித்து வருபவர்கள் ராஜகோபால் - ரத்னம்மா தம்பதியினர். இவர்கள் மகள்  13 வயதான மைனர் சிறுமி அதேபகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார். வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு வந்த, சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். பெற்றோர் பணி நிமித்தம் இருவரும் வெளியே சென்று இருந்த நிலையில் சிறுமியின் தாய் மாமாவான நாகராஜ் வீட்டிற்கு  வந்து பாலியியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார்.  

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று கதவை மூட முயன்றபோது சிறுமியின் கழுத்தை காய் வெட்டும் கத்தியை கொண்டு அறுத்து வாயில் ஆசிட் ஊற்றினார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த  அக்கம் பக்கத்தினர் வந்தனர். அப்போது நாகராஜ் உதவி செய்வது போன்று நடித்த நிலையில், சிறுமி சைகையில் ஆசிட் ஊற்றியது நாகராஜ் என தெரிவித்தார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோருக்கு போன் செய்து நடந்த விவரங்களை அக்கம்பக்கத்தினர் கூறினர். தொடர்ந்து சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லூர் எஸ்.பி. விஜயா ராவ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை பார்வையிட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நாகராஜை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.