பள்ளி வேனில் 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்
பள்ளி வேனிலேயே மூன்று வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருக்கிறது. பள்ளியின் பெண் உதவியாளர் முன்னிலையில் வேன் டிரைவர் இந்த செயலை செய்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் தலைநகர் போபாலில் இயங்கி வருகிறது கிண்டர்கார்டன் என்கிற தனியார் பள்ளி. இந்த பள்ளியில் படித்து வந்த மூன்று வயது குழந்தை வேனில் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது குழந்தையின் உடை மாற்றப்பட்டு இருந்திருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் வேன் டிரைவரிடம் விசாரித்த போது சரியாக பதில் சொல்லவில்லை.
வீட்டிற்கு வந்ததும் குழந்தை பிறப்பு உறுப்பில் வலி உள்ளதாக கூறியிருக்கிறது. ஆடை மாற்றப்பட்டிருந்ததையும், பிறப்பு உறுப்பில் வலி உள்ளதாக சொல்வதையும் வைத்து பெற்றோருக்கு சந்தேகம் வந்திருக்கிறது.
இதை எடுத்து பள்ளி நிர்வாகத்திடம் சென்று பெற்றோர் புகார் அளித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் எந்த பிரச்சனையும் இல்லை . எந்த தவறும் எடுக்கவில்லை என்று சொல்லிவிட்டனர்.
இதை பின்னர், மீண்டும் குழந்தை இடம் பெற்றோர் விசாரித்த போது, பள்ளியின் வேன் டிரைவர் வேனில் வந்த போது பலாத்காரம் செய்ததை சொல்லி இருக்கிறது. குழந்தை சொன்னதை அடுத்து சந்தேகம் வந்ததால், குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது . மருத்துவ பரிசோதனையில் அந்த குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதியாக இருக்கிறது.
இதனால் அந்த குழந்தை சொன்ன புகாரின் பேரில் பள்ளி வேன் டிரைவர் கிஷோர் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அந்த பள்ளி பெண் உதவியாளர் முன்னிலையில் தான் அந்த வாலிபர் அந்த சிறு குழந்தையை பலாத்காரம் செய்திருக்கிறார். இதனால் அந்த பெண் ஊழியரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.