×

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியை தோப்புக்குள் அலேக்கா தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை

 

எடப்பாடி அருகே இரவில் ரோட்டில் நடந்துச்சென்ற 80 வயது மூதாட்டியை மது போதையில் அத்துமீறி பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக, 42 வயது விசைத்தறி கூலி தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர். 

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் இருப்பாளி கிராமத்தில் கடந்த 21-ஆம் தேதி இரவு கோவில் திருவிழாவில் நடைப்பெற்ற தெருக்கூத்தை பார்த்துவிட்டு வீடு திரும்பிய 80 வயது மூதாட்டி (ராமாயி), இரவு சுமார் 11 மணியளவில் இருப்பாளி கால்நடை மருத்துவமனை அருகே தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் மர்ம ஆசாமி ஒருவர் ரோட்டில் நடந்து வந்த மூதாட்டியை அருகிலிருந்த தென்னந்தோப்புக்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

அதன் பின்னர் நடந்த சம்பவத்தை மூதாட்டி தனது வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்கவே, உடனடியாக ஜலகண்டாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளித்து பின்னர் எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளியான மர்ம போதை ஆசாமியை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் கலர்ப்பட்டியைச் சேர்ந்த 42 வயது தவசியப்பனிடம் விசாரணை மேற்கொண்டபோது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனடியாக அவரை கைது செய்த பூலாம்பட்டி போலீசார், எடப்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

மது போதை தலைக்கேறிய நிலையில் 80 வயது மூதாட்டியை பாலியல் தொந்தரவு செய்த 42 வயது விசைத்தறி கூலி தொழிலாளி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.