×

‘ரூ.1300 பணத்துக்காக’ 72 வயது மூதாட்டி பலாத்காரம் : சென்னையில் பரபரப்பு!

சென்னை ராயப்பேட்டை ரோட்டரி காலனி பகுதியை சேர்ந்த 72 மூதாட்டி திருமணமாகாமல் அப்பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். அவர் முதியோர் உதவி தொகையை பெற்றுக் கொண்டும், அப்பகுதியில் கிடைக்கும் சிறு, சிறு கூலி வேலைகளை செய்து கொண்டும் தனது வாழ்நாளை ஓட்டி வந்துள்ளார். நேற்றுமுன்தினம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் பேசிவிட்டு தூங்கச் சென்ற மூதாட்டி மறுநாள் காலையில் வெகு நேரமாகியும் கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மூதாட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
 

சென்னை ராயப்பேட்டை ரோட்டரி காலனி பகுதியை சேர்ந்த 72 மூதாட்டி திருமணமாகாமல் அப்பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். அவர் முதியோர் உதவி தொகையை பெற்றுக் கொண்டும், அப்பகுதியில் கிடைக்கும் சிறு, சிறு கூலி வேலைகளை செய்து கொண்டும் தனது வாழ்நாளை ஓட்டி வந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் பேசிவிட்டு தூங்கச் சென்ற மூதாட்டி மறுநாள் காலையில் வெகு நேரமாகியும் கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மூதாட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது . சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த விசாரணையில் களமிறங்கிய போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது மூதாட்டி வீட்டின் பின்புறம் ஓடும் கூவம் நதி வழியாக இளைஞர் ஒருவர், அவரது வீட்டுக்குள் சென்றது தெரியவந்தது . இதையடுத்து நொச்சிகுப்பத்தை சேர்ந்த குதிரை ஓட்டும் வசந்தகுமார் என்ற 21 வயது இளைஞரை பிடித்து விசாரித்தனர். அதில் போதையில் மூதாட்டியின் வீட்டுக்குள் திருட புகுந்த வசந்தகுமார் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அங்கிருந்த கத்தியை எடுத்து கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார் . பின்னர் வீட்டிலிருந்த 1,300 ரூபாயை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அத்துடன் போலீசார் விசாரணையில் வசந்தகுமார் மீது கொள்ளை வழக்குகள் ஏற்கனவே பதிவாகி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வசந்தகுமார் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது