×

7 வயது சிறுவனுடன் தகாத உறவு : நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர். நாகர்கோவில் : சிறுவனுடன் தகாத உறவு வைத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை என்பது பெண்களுக்கு மட்டுமல்லாமல் சிறுவர் சிறுமிகள், ஆண்கள் என பலருக்கும் நிகழ்ந்து வருகிறது . இதுபோன்ற குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள
 

குற்றங்களை தடுக்க கடுமையான  தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று பலரும் கருத்து  கூறி வருகின்றனர்.

நாகர்கோவில் : சிறுவனுடன் தகாத உறவு வைத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாலியல் வன்கொடுமை என்பது பெண்களுக்கு மட்டுமல்லாமல் சிறுவர் சிறுமிகள், ஆண்கள் என பலருக்கும் நிகழ்ந்து வருகிறது . இதுபோன்ற குற்றங்களை தடுக்க கடுமையான  தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று பலரும் கருத்து  கூறி வருகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சந்தையடியை சேர்ந்தவர் ஜெப செல்வின். 27 வயதான இந்த இளைஞர் சமையல் வேலைசெய்து வந்துள்ளார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது வீட்டின் அருகில் வசித்து வந்த 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் குடும்பத்தார் இதுகுறித்து  கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த வழக்கானது  நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கில் இடது தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், குற்றவாளி ஜெப செல்வினுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும்,  ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.