×

“கொட்டும் ரத்தமும் ,முனகல் சத்தமுமா தூக்கி போட்டுட்டீங்களே” -ஏழு வயது மகளின் நிலை கண்டு கதறிய தந்தை

தந்தைக்கு அருகில் படுத்திருந்த ஏழு வயது மகளை யாரோ தூக்கி சென்று பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது குஜராத்தின் சூரத் நகரில் லட்சுமி வில்லா டெக்ஸ்டைல் பூங்காவில் உள்ள கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது .அப்போது அந்த கட்டுமான பணிகளுக்காக அதன் தொழிலாளர்கள் பலர் தங்களின் குடும்பத்தோடு அங்கேயே தூங்கி வந்தார்கள் .அப்போது அந்த கட்டிடத்தில் ஒரு தொழிலாளர் தன்னுடைய ஏழு வயது மகளோடு பகலில் வேலை முடித்து விட்டு இரவில் தூங்கிக்கொண்டிருந்தார் .இதை அந்த
 

தந்தைக்கு அருகில் படுத்திருந்த ஏழு வயது மகளை யாரோ தூக்கி சென்று பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது


குஜராத்தின் சூரத் நகரில் லட்சுமி வில்லா டெக்ஸ்டைல் ​​பூங்காவில் உள்ள கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது .அப்போது அந்த கட்டுமான பணிகளுக்காக அதன் தொழிலாளர்கள் பலர் தங்களின் குடும்பத்தோடு அங்கேயே தூங்கி வந்தார்கள் .அப்போது அந்த கட்டிடத்தில் ஒரு தொழிலாளர் தன்னுடைய ஏழு வயது மகளோடு பகலில் வேலை முடித்து விட்டு இரவில் தூங்கிக்கொண்டிருந்தார் .
இதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் நோட்டமிட்டுள்ளார்கள் .அதனால் அவர்களில் யாரோ சில விஷமிகள் அந்த சிறுமியை தூக்கி செல்ல திட்டமிட்டிருக்கிறார் ,அதன் படி அதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தார் .
கடந்த வியாழக்கிழமையன்று இரவு அந்த சிறுமியோடு அவரின் தந்தை தூங்கிக்கொண்டிருந்தார் ,அப்போது அங்கு வந்த யாரோ ஒருவர் அந்த சிறுமியை தூக்கிக்கொண்டு போய் விட்டார் .அதன் பின்னர் அந்த விஷமி அந்த சிறுமியை ஒரு மறைவான இடத்தில வைத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ,தூக்கி போட்டு விட்டு ஓடிவிட்டார் .அப்போது அந்த சிறுமி ரத்தவெள்ளத்தில் முனகல் சத்தத்துடனும் கிடப்பதை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்து போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் அந்த சிறுமியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தார்கள் .அதற்குள் பக்கத்தில் படுத்திருந்த மகளை காணாத அவரின் தந்தை அவரை தேடி பல இடங்களில் அலைந்தார் .பின்னர் அவரும் போலீசில் புகாரளித்தார் ,அதன் பின்னர் மகளின் நிலையை போலீசார் மூலம் அறிந்து ,மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அவரை கவனித்து வருகிறார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்